games

img

ஐசிசி டி20 உலகக் கோப்பை : இலங்கை - நமீபியா அணிகள் இன்று பலப்பரீட்சை 

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் இன்று நடைபெற இருக்கும் முக்கிய தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை - நமீபியா அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன.

ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நேற்று ஓமனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றுக்கு ஏற்கெனவே நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மற்ற 4 அணிகளைத் தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று முதல் அக்டோபர் 22 ஆம் தேதி வரை ஒமான், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

தகுதிச் சுற்றில் விளையாட உள்ள 8 அணிகளும் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து, இலங்கை ஆகிய அணிகளும், பி பிரிவில் வங்கதேசம், ஒமான், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த 2 பிரிவுகளிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

இதில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் பப்புவா நியூகினியா அணியை ஓமன் வீழ்த்தியது. மேலும் நேற்றிரவு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் வங்கதேச அணியை ஸ்காட்லாந்து அணி வீழ்த்தியது. இந்நிலையில் இன்று மீண்டும் இரண்டு தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற இருக்கிறது.

இதில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற இருக்கும் போட்டியில் அயர்லாந்து - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. மேலும் அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு நடைபெற இருக்கும் ஆட்டத்தில் இலங்கை - நமீபியா அணிகள் மோதுகின்றன. இவ்விருப் போட்டிகளிலும் அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் வெற்றிப்பெற்று பிரதான சுற்றுக்குள் நுழையப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

;