பிரம்மாண்ட குளிரூட்டப்பட்ட மைதானம், அதிநவீன ஹோட்டல்கள் என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு மேல் செலவிட்டு 22-வது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துகிறது கத்தார் நாடு. உலகக்கோப்பை வரலாற்றில் அதிக தொகை செலவிடப்பட்ட போட்டியாக கத்தார் தொடர் இருப்பதால் ஒட்டுமொத்த விளையாட்டு உலகமே கத்தார் தொடரைத்தான் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது. ஆனால் கத்தார் நாட்டில் உலகக்கோப்பைக்கான சிறப்பு வேலைகளில் மிக மோசமான அளவில் மனித உரிமை மீறல் மீறப்பட்டுள்ளதாக ஐரோப்பா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளின் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், சிறப்பு நிபுணர்கள் என பல்வேறு தரப்பினர் புகார் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
உலகநாடுகள் முன்வைக்கும் மனித உரிமை மீறல்கள்
2010-ஆம் ஆண்டு கத்தார் நாட்டிற்கு உலகக்கோப்பை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் கத்தார் உலகக்கோப்பை நடத்து வதற்கான 12 ஆண்டு காலம் அவகாசம் இருக்கிறது என முதலில் அசால்ட்டாக மைதான வேலையை செய்தது. அதன் பின்பு கொரோனா காலம் சற்று புரட்டி யெடுத்ததால் புலம்பெயர் தொழிலாளர்கள் உதவியும் இல்லாததால், கடைசி 2 ஆண்டுகளில் பிரம்மாண்டமான செலவில் 8 மைதானங்கள், உலக தரத்தில் சாலை சீரமைப்பு, மெட்ரோ ரெயில், விமான நிலைய விரிவாக்கம், 100-க்கும் மேற்பட்ட நட்சத்திர ஓட்டல்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மிக குறுகிய காலங்களில் ஆச்சரியப்படும் அளவுக்கு மேம்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை ஏற்பாடுகள் எல்லாம் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இருந்தாலும், உலகக்கோப்பை ஏற்பாடு களின் கட்டுமான பணிகளுக்கு வரவழைக்கப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களை அடிமாடுகள் போல நடத்தியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பிரம்மாண்ட செலவு, மயக்க வைக்கும் ஏற்பாடுகள் என பல்வேறு ஆச்சர்யங்களுடன் உலகக்கோப்பை போட்டியை நடத்த கத்தார் மிகவும் ஆவலுடன் உள்ள நிலையில், இந்த மனித உரிமை மீறல்கள் கத்தார் அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. முக்கியமாக விளையாட்டு உலகில் அதிரடி நடவடிக்கைக்கு பெயர் பெற்ற பிபா இந்த விவகாரத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்ற விஷயம் வேறு கிளைமேக்ஸாக இருப்பதால் உலகக்கோப்பை தொடரை விட மனித உரிமை மீறல் விவகாரம் பரபரப்பாக நகர்ந்து வருகிறது.
குற்றச்சாட்டுகள்
1.வெளிநாடுகளில் இருந்து வந்த தொழிலாளர்களின் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல்
2.ஓய்வின்றி நாள் கணக்கில் வேலை
3.போதிய ஊதியம் வழங்கப்படவில்லை
4.சுகாதாரமின்றி மோசமான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்
5.தொழிலாளர்கள் நாட்டைவிட்டுசெல்ல அனுமதிக்கப்படவில்லை
6.அதிரடி வேலைகளால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் உயிரிழப்பு
இந்தியாவில் அதிகம்...
கத்தார் உலகக்கோப்பை தொட ருக்காக பணிபுரிந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் இந்தியர்கள்தான் அதிகம் உள்ளனர். நேபாளம், இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தும் கத்தார் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளனர். கட்டிட விபத்தில் இறந்த தொழிலாளர்களில் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் என ஆங்கிலச் செய்திகள் கூறுகின்றன.
ஐரோப்பிய ரசிகர்கள் வருகை குறையுமா?
கத்தார் அரசின் மனித உரிமை மீறலை எதிர்த்து மிக கவனமாக போராடி வருவது ஐரோப்பிய நாடுகள் மட்டுமே. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கிளப் தொடர்களில் கத்தார் தொடரை புறக்கணிப்போம் என கோஷங்களுடன் உலகக்கோப்பை தொடருக்கு எதிராக பேனர் வைத்து மைதானத்திலேயே போராடி னர். மேலும் கத்தார் தொடரை புறக்கணிப்போம் என ஹேஸ்டேக் மூலம் உறுதிமொழியும் எடுத்துள்ளனர். கால்பந்து உலகில் அதிக ரசிகர்களை கொண்ட கண்டமான ஐரோப்பாவில் இத்தகைய போராட்டங்களால் ரசிகர்களின் உலகக்கோப்பை வருகையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.