games

img

எங்களை மன்னித்து விடுங்கள் மரிய ஷரபோவா..... சச்சினைத் தெரியாது என்றதற்காக உங்களை அன்று விமர்சித்து விட்டோம்.... .

புதுதில்லி:
கடந்த 2014-ஆம் ஆண்டில் ரஷ்ய டென்னிஸ் வீராங்கனையான மரிய ஷரபோவா, தனக்கு சச்சின் டெண்டுல்கர் யாரென்றே தெரியாது என தெரிவித்திருந்தார். 

இதற்காக அவருக்கு கண்டனங்கள் குவிந்தன. கிரிக்கெட் கடவுளான சச்சினை தெரியாது என்று சொல்வதா? என்று பலரும் ஷரபோவாவிடம் சண்டைக்குச் சென்றனர். தற்போது, மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து சச்சின் டெண்டுல்கர், தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொண்டுள்ள நிலையில், இவருக்காகவா, மரிய ஷரபோவாவிடம் சண்டைக்குச் சென்றோம்? என்று 6 ஆண்டுகளுக்குப் பிறகு, சமூக வலைதளவாசிகள் வருத்தப்
பட்டுள்ளனர். 

குறிப்பாக கேரளத்தைச் சேர்ந்த சமூக வலைதளவாசிகள், ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா-வின் டுவி்ட்டர் கணக்கை டேக்செய்து, அவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளனர்.“மன்னியுங்கள் மரியா. நீங்கள் பெரிய மேதைதான். சச்சினை எங்களுக்கு வீரராகத்தான் தெரியும். ஆனால், ஒரு மனிதராகத் தெரியாது. ஆனால் நீங்கள் சரியாகத்தான் கணித்தீர்கள். உங்களை தவறாகப் பேசியதற்கு மன்னிக்கவும்” என ஒருவர் தெரிவித்துள்ளார்.மற்றொருவர், “ஷரபோவா உங்களுக்கு ஷவர்மாவும், குழிமந்தி பிரியாணியும் தந்து மன்னிப்புக்கோருகிறேன். ஒரு லாரி நிறைய மன்னிப்பு ஏற்றி வருகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.தங்களின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தபின் கடவுளின் சொந்தநாடான கேரளாவில் நடைபெறும் திருச்சூர் பூரம் பண்டிகைக்கு வர வேண்டும் என்றும் சிலர் அழைப்பு விடுத்துள்ளனர்.அவர்கள் ‘சாரி மரியா ஷரபோவா’ என்னும்ஹேஷ்டேக்கையும் டிரெண்டாக்கி வருகின்ற னர். திடீரென ஆயிரக்கணக்கானோர் தன்னிடம் மன்னிப்புக் கேட்பதை அறிந்த ஷரபோவா,“யாருக்கேனும் ஆண்டுகள் பற்றி ஏதேனும் குழப்பம் வந்துவிட்டதா” என்றும் அப்பாவியாக கேட்டுள்ளார்.

;