games

img

அகமதாபாத்தில் நடை பெறும் டி 20 தொடரை பார்க்க  ரசிகர்களுக்கு அனுமதியில்லை

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 டி -20 தொடருக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி -20 தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளும் ஆடிய ஆட்டத்தில் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது  இரு அணிகளும் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3- வது டி 20 போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
முதல் இரண்டு போட்டிகளுக்கு மைதானத்தின் 50 % ரசிகர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகளவில் பரவிவருவதால், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் எஞ்சியுள்ள 3 டி -20 போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்தது. அதேபோல் புனேவில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கும் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை
மேலும் முதல் மற்றும் 2 -வது டி 20 ஆட்டத்துக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்ததது குறிப்பிடத்தக்கது.

;