விளையாட்டு உலகில் கடந்த சில வாரங் குளாக கொரோனா பாதிப்பு பற்றிய செய்திகள் குறை வாகவே வெளியாகின. அதனால் விளையாட்டு உலகில் கொரோ னா பாதுகாப்பு வளையத்தை நீக்கி ரசிகர்கள் அனுமதியுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மூலம் கொரோனா பரவல் மீண்டும் அடியெடுத்து வைத்துள்ளது. நியூசிலாந்து நாட்டில் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரே லிய அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் ஆஷ்லி கார்ட்னெர் கொரோனா பாதிப்பில் சிக்கி யுள்ளார். 10 நாட்கள் தனிமைப்படுத்தப் பட்டு உள்ளதால் முதல் இரு லீக் ஆட்டங்களில் ஆஷ்லி விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.