games

img

விளையாட்டு

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இந்திய வீரர் சிராக் சிக்காராவுக்கு தங்கம்

23 வயதுக்கு உட்பட்டோருக் கான உலக மல்யுத்த சாம்பியன் ஷிப் போட்டி அல்பேனியா நாட்டில் நடைபெற்றது. இந்த தொடரின் ஆட வர் 57 கிலோ எடைப் பிரிவு இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் சிராக் சிக்காரா தகுதிபெற்றார்.  இறுதிபோட்டியில் கஜகஸ்தான் வீரர் கராச்சோவை 4-3  என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி  தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்  ளார். 2022-ஆம் ஆண்டு ஒலிம்பிக் பதக்கம் வென்ற அமன் செஹ்ராவத் (ஆண்கள் 57 கிலோ)  மற்றும் கடந்த ஆண்டு ரீத்திகா ஹூடா  (பெண்கள்  76 கிலோ)  ஆகியோருக்குப் பிறகு சாம்பியன்  ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற  பெருமையை சிராக் சிக்காராபெற்றார். அல்பேனியாவில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொட ரில் இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 7 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

எமர்ஜிங் ஆசியக் கோப்பை டி-20 இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன்

வளர்ந்து வரும் வீரர்களுக் கான ஆசியக் கோப்பை 2024 டி-20 கிரிக்கெட் தொடர் ஓமன் நாட்டில் நடைபெற்றது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையி றுதியில் பாகிஸ்தான் அணியை இலங்கை அணியும், இந்திய அணியை ஆப்கானிஸ்தான் அணியும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில், இந்திய நேரப்படி ஞாயிறன்று நள்ளிரவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப் பிற்கு 133 ரன்கள் எடுத்தது. 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கு டன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18.1 ஓவரில் வெற்றி இலக்கை (134 ரன்கள்) எளிதாக எட்டி, எமர்ஜிங் ஆசியக் கோப்பையை ஆப்கானிஸ் தான் முதன்முறையாக கைப்பற்றியது.

தோனி ஐபிஎல் நடப்பு சீசனில் விளையாடுவார்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மூன்று விதமான உலகக்கோப்பையை வென்றுக் கொடுத்த ஒரே இந்திய கேப்டனுமான  மகேந்திர சிங் தோனி, கடந்த 2019இல் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் விளை யாட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். தற்போது தோனிக்கு 43 வயது ஆகியுள்ள நிலையில், அவர் அடுத்தாண்டு (2025) ஐபிஎல் சீசனில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் கிளம்பியது. இந்நிலையில், 2025ஆம் ஆண்டின் ஐபிஎல் சீசனில் தான் விளையாட உள்ளதாக தோனி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், “டி-20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற ஜடேஜா, துபேவுக்கு  அதிக வாய்ப்பு இருந்ததால், கடந்த ஐபிஎல் சீசனில் அவர்களுக்கு சென்னை  அணியின் முன்வரிசையில் வாய்ப்பு தரப்பட்டது. நான் பின்வரிசையில் ஆடினாலும்  அணியினர் மகிழ்ச்சியாகவே இருந்தனர். அடுத்த சில வருடங்களுக்கு விளையாட்டை அனுபவிக்க விரும்புகிறேன்” என அறிவித்துள்ளார். தோனியின் இந்த அறிவிப்பு தமிழ்நாடு மற்றும் ஒட்டுமொத்த ஐபிஎல் சென்னை அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.