இஷான் கிஷான், ஷ்ரெயாஸ் ஐயருக்கு ஐபிஎல் போட்டிகளிலும் விளையாட தடை விதிக்கலாமே?
உலகின் மிகப்பெரிய உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடராக இருப்பது இந்தியாவின் ஐபிஎல் தொட ராகும். பணம் கொழிக்கும் விளை யாட்டான இந்த ஐபிஎல் தொடரில் அழுத்தம் இல்லாமல் ஜாலியாக விளை யாடலாம் என்பதால் ரஞ்சி, தேசிய அணி யில் விளையாடுவதை விட ஐபிஎல் தொடரில் விளையாடுவதையே இந்திய வீரர்கள் அதிகம் விரும்புகின்றனர்.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நெருங்கி விட்டால் காயம் உள்ளிட்ட எதாவது பிரச்சனை யை காரணம் காட்டி, தனிப்பட்ட முறை யில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) தெரியாமல் ரகசியமாக ஐபிஎல் போட்டிக்காக பயிற்சிக்கு சென்று விடுவார்கள். கடந்த காலங்களில் ஹர்திக் பாண்டியா இந்த முறையை கடைபிடித்தார். ஆனால் ஐபிஎல் தொடர் முடிந்த பின்புதான் இந்த விவகாரம் வெளியே கசிந்தது. இதனால் யாரும் இந்த விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை.
ஆனால் நடப்பு சீசன் ஐபிஎல் தொட ருக்காக இஷான் கிஷான் தென் ஆப்பி ரிக்கா, இங்கிலாந்து அணிக்கெதிரான தொடர்களிலும், ரஞ்சி கோப்பையில் தனது மாநில அணியான ஜார்க்கண்ட் அணிக்காகவும் பங்கேற்காமலும் வதோ ராவில் தனி பயிற்சி மேற்கொண்டு சிக்கிக் கொண்டார். இஷான் கிஷா னைப் போல இந்திய அணியின் அதிரடி பேட்டர் ஷ்ரெயாஸ் ஐயரும் ஐபிஎல் தொடருக்காக ரஞ்சிக் கோப்பையிலும், இங்கிலாந்து அணிக்கெதிரான தேசிய டெஸ்ட் போட்டிகளிலும் நழுவினார். இந்த விவகாரம் வெளியே கசிய, தேசிய அணிக்கான ஒப்பந்தப் பட்டியலில் இருந்து இஷான் கிஷான், ஷ்ரெயாஸ் ஐயரை நீக்கி அதிரடி நட வடிக்கையில் களமிறங்கியது பிசிசிஐ.
ஐபிஎல் போட்டிகளிலும் தடை
இஷான் கிஷான், ஷ்ரெயாஸ் ஐயரை பிசிசிஐயின் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியது நல்ல விஷயம் தான் என்றாலும், அதைவிட மிக முக்கியமான விஷயம் ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க முடியாத படி இருவரையும் அந்த தொடரில் இருந்து நீக்க வேண்டும். அவ்வாறு செய்தால் வரும் காலங்களில் ஐபிஎல் தொட ருக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கா மல் மற்ற அனைத்து இந்திய வீரர் களும் நாட்டிற்காக தேசிய அணிக்கும், மாநிலத்திற்காக ரஞ்சிக் கோப்பை யிலும் விளையாடுவார்கள்.
பந்து கலர்கள் மூலம் தப்பித்த ஹர்திக் பாண்டியா
இஷான் கிஷான், ஷ்ரெயாஸ் ஐயர் போலவே ஐபிஎல் தொடருக்காக ஹர்திக் பாண்டியா மறைமுகமாக குஜராத் மாநி லத்தில் உள்ளூர் டி-20 தொடரில் விளையாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் பிசிசிஐக்கு தெரிந்தாலும், பந்து கலர்கள் மூலம் தப்பித்துள்ளார் ஹர்திக் பாண்டியா. அதிரடி வீரர் என்ப தால் ஹர்திக் பாண்டியாவை வெள்ளை பந்து ஆட்டங்களில் (ஒரு நாள், டி-20) மட்டுமே களமிறக்க பிசி சிஐ தரம் பிரித்து வைத்துள்ளது. சிவப்பு பந்து (டெஸ்ட்) ஆட்டங்களில் ஹர்திக் பாண்டியாவை சூழ்நிலை க்கு ஏற்ப மட்டுமே இந்திய அணி அழைக்கும். மற்ற நேரங்களில் அவர் ஓய்விலேயே இருப்பார். அத னால்தான் ஐபிஎல் தொடருக்காக ஹர்திக் பாண்டியா மறைமுகமாக பயிற்சி பெற்றும் பிசிசிஐ ஒப்பந்த பட்டி யலில் நீக்கம் இல்லாமல் இருந்து தப்பித்துள்ளார்.
பிசிசிஐ கறார் உத்தரவு
ஹர்திக் பாண்டியாவை “ஏ” பிரிவு (ஆண்டுக்கு ரூ.5 கோடி சம்பளம்) பட்டியலில் வைத்துள்ளது பிசிசிஐ. இஷான் கிஷான், ஷ்ரெயாஸ் ஐயர் பிரச்சனை காரணமாக ஹர்திக் பாண்டியாவிற்கும் பிசிசிஐ அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில்,”தேசிய ஆட்டங்கள் இல்லாத காலகட்டம், இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நேரங் களில் வெள்ளை பந்து ஆட்டங்க ளான விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில் கண்டிப்பாக விளை யாட வேண்டும்” என பிசிசிஐ எச்சரிக்கையுடன் உத்தரவிட்டுள்ளது.
ஷ்ரெயாஸ் விவகாரத்திலும் சிக்கிய மோடி
சமீபத்தில் நிறைவுபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர் கொண்டது. இந்திய அணி உலகக் கோப்பை வெல்லும் நம்பிக்கையோடும் அதன் மூலம் மக்களவை தேர்தலுக்கான அரசியல் ஆதாய நிகழ்வை அரங்கேற்றும் முனைப்பில் பிரதமர் மோடி இறுதி ஆட்டத்தை காண குஜராத் அகமதாபாத் மைதானத்திற்கு சென்றிருந்தார்.
இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவ, பிரதமர் மோடியின் அரசியல் ஆதாய திட்டங்கள் சீட்டுக்கட்டாய் சரிந்தது. இருப்பினும் பிரதமர் மோடி இந்தியா வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூமிற்குள் நுழைந்து அனைத்து வீரர்களையும் வரிசையில் நிற்க வைத்து கைகுலுக்கி, முதுகில் தட்டிக்கொடுத்து, கட்டியணைத்து ஆறுதல் கூறுவது போன்று ஷூட்டிங் அரங்கேற்றினார். இந்த நிகழ்வில் ஷ்ரெயாஸ் ஐயர் பிரதமர் மோடியை முறைத்து நின்றதாகவும், திட்டியதாகவும் பாஜகவினர் வெறுப்பு பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டனர். இந்நிலையில், பிரதமர் மோடியை அவமதித்த தன் காரணமாகவே ஷ்ரெயாஸ் ஐயர் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் நீக்கப்பட்டு வுள்ளதாக ரசி கர்கள் பிரதமர் மோடியையும் இந்த விவகார த்தில் சிக்க வைத்து வறுத்தெடுத்துவருகின்றனர்.