பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் 7 நாட்கள் ஓய்வு ஏன்?
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் (பார்டர்-கவாஸ்கர் கோப்பை) விளையாடி வருகிறது. 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி படுதோல்வியை சந்தித்த நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1-ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் நடைபெறு கிறது. பொதுவாக டெஸ்ட் தொடரில் ஒவ்வொரு போட்டி களுக்கும் இடையே 3 நாட்கள் ஓய்வு வழங்கப்படும். ஆனால் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டிக்கு மட்டும் 7 நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு போட்டிகளுக்கும் 3 நாட்கள் ஓய்வு வழங்கப்பட்ட நிலையில், 3-வது டெஸ்ட் போட்டிக்கு மட்டும் 7 நாள் ஓய்வு ஏன்? என காரணம் புரியவில்லை. வீரர்கள் பார்ம் பாதிக்க வாய்ப்பு பொதுவாக கிரிக்கெட் விளையாட்டாக இருந்தாலும் சரி, மற்ற எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி குறிப்பிட்ட போட்டிகளுக்கு இடையே போதுமான ஓய்வு மட்டுமே அளிக்கப்பட வேண்டும். காரணம் அதிக நாள் ஓய்வு அளித்தால் வீரர்கள் பயிற்சியில் மிகவும் மந்தமாக இருப்பார்கள். பயிற்சியை சரிவர மேற்கொள்ளமாட்டார் கள். இன்னும் நாட்கள் இருக்கிறது என்று அசால்ட்டாக இருப்பார்கள், ஊர் சுற்றுவார்கள் என பல்வேறு நிகழ்வு களால் வீரர்களின் துடிப்பு மற்றும் திடமான பார்ம் பிரச்சனையில் சிக்கல் உருவாக்க 50% வாய்ப்புளள்து.
ஸ்மித் பொறுப்பில் புத்துணர்ச்சி பெறுமா ஆஸி.,?
33 வயதை கடந்து விட்டாலும் மைதானத்தில் இன்னும் துறுதுறுவென இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்டரும், முன்னாள் கேப்டனுமான ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளார். 2014-ஆம் ஆண்டு முதல் 2018 வரை டெஸ்ட், ஒருநாள், டி-20 ஆகிய போட்டிகளின் கேப்டனாக அசத்திய ஸ்மித் 2018-ஆம் ஆண்டு பந்துசேத சர்ச்சையால் சஸ்பெண்ட் உத்தரவை எதிர்கொண்டு கேப்டன் பொறுப்பை இழந்தார். ஒருநாள், டி-20 போட்டிகளை விட டெஸ்ட் போட்டியில் அனுபவ கேப்டன்ஷிப் மிகவும் முக்கியம். திடீரென ஸ்மித் நீக்கப்பட்டதால் ஆஸ்திரேலிய அணி கடுமையாக திணறியது. ஸ்மித் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங், கள வியூகம், ஸ்லெட்ஜிங், வீரர்களுக்கு கடுமை யான உத்தரவு என அனைத்திலும் கைதேர்ந்தவர் என்பதால், இவர் இல்லாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் புத்துணர்ச்சியை இழந்தது போல் இருந்தனர். அதன் பின்பு பெய்ன் தலைமையில் ஓரளவு மீண்ட ஆஸ்திரேலிய அணி, அவர் ஓய்வுக்கு பிறகு கம்மின்ஸ் தலைமை யில் சற்று திணறலான ஆட்டத்திற னுடன் இன்று வரை வெளிநாடுகளில் மிக மோசமாக திணறி வருகிறது. இந்நிலையில், தாயார் உடல்நிலையால் கம்மின்ஸ் தாய்நாடு திரும்பியுள்ளதால் 3-வது டெஸ்ட் போட்டிக்கு மட்டும் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்கவுள்ளார். ஸ்மித் இந்த ஆட்டத்தில் வெற்றியையோ அல்லது ஓரளவு வலுவான நிலை யையோ ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்படுத்தி கொடுத்தால், வரும் காலங்களில் கம்மின்ஸ் கேப்டன் ஷிப்பிலிருந்து நீக்கப்பட்டு ஸ்மித் கேப்டன் பொறுப்பை தொடர வாய்ப்புள்ளது.
வெளியாகியது டிஎன்பிஎல் அட்டவணை
ஐபிஎல் தொடரை போல தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடர் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்கள் மட்டும் பங்கேற்கும் டிஎன்பிஎல் தொடரில் 6 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவு பெற்ற நிலையில், 7-வது சீசன் வரும் ஜூன் 23 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை திண்டுக்கல், கோயம்புத்தூர், சேலம் மற்றும் திருநெல்வேலி 4 மைதானங்களில் நடைபெறுகிறது. சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திருச்சி வாரியர்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் வீரர்களுக்கான ஏலம் கடந்த வாரம் நிறைவுபெற்ற நிலையில், 7-வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் சேப்பாக்கம் - திருநெல்வேலி அணிகள் மோதுகின்றன.
ஆண்டர்சன் ‘40 வயதிலும் முதலிடம்’
பொதுவாகவே கிரிக்கெட் உலகில் 35 வயதை கடந்து விட்டாலே வேகப்பந்து வீச்சாளர்களை அவர்களின் வயதை காரணம்காட்டி அணியில் தேர்வு செய்யமாட்டார்கள் அல்லது ஒதுக்கப்படுவார்கள். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடிக்கடி ஏற்படும் காயம் இதற்கு காரணமாக சொல்லப்படும். ஆனால், விளையாட்டில் வயதுக்கும் திறமைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நிரூபித்துள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன். மேலும் தனது 40-வது வயதில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். ஆரம்பகால வாழ்க்கை ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து லங்காஷைரில் உள்ள பர்ன்லேவில் ஜூலை 30, 1982 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தனது பள்ளி படிப்பை பர்ன்லி செயின்ட் மேரி மற்றும் செயின்ட் தியோடரின் ஆர்.சி உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். இவர் சிறு வயதிலிருந்தே பர்ன்லி கிரிக்கெட் சங்கத்தில் இணைந்து விளையாடினார். 17 ஆம் வயதில், ஆண்டர்சன் லங்காஷயர் லீக்கின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்தார். அறிமுகமான சில மாதங்களிலேயே இவர் இங்கிலாந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக மாறினார்.
கிரிக்கெட் வாழ்க்கை
2002 ஆம் ஆண்டு ஜிம்பாவேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். அன்றிலிருந்து இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் திறமையான வேகப்பந்து வீச்சாளராக ஜேம்ஸ் ஆண்டர்சன் உருவெடுத்தார். மேலும் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்களில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சாளரான க்ளென் மெக்ராத்தை பின்னுக்குத்தள்ளி 2018-ஆம் ஆண்டு ஜேம்ஸ் ஆண்டர்சன் முன்னிலை வகித்தார். பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ஆசஸ் போட்டியில் மூன்று முறை இங்கிலாந்து வெற்று பெறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். தற்போதுவரை 179 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன், 38221 பந்துகளை வீசி, 685 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில், மூன்று முறை 10 விக்கெட்டுகளையும், 32 முறை 5 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தியுள்ளார்.
40 வயதில் அசத்தல்
கடந்த நான்கு ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸை பின்னுக்குத் தள்ளி, தனது 40 வயதில் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன். இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை 866 புள்ளிகளுடன் 6-வது முறையாக பிடித்து அசத்தியுள்ளார். இவரை தொடர்ந்து 2-ஆம் இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினும், 3-ம் இடத்தில் பேட் கம்மின்ஸூம் உள்ளனர். 1936-ல் கிளாரி கிரிம்மெட் 44 வயதில் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். தற்போது, 40 வயதில் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் என்கிற சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் நிகழ்த்தியுள்ளார்.