மாட்ரிட் டென்னிஸ்
பட்டம் வெல்லுமா போபண்ணா ஜோடி?
இன்று இறுதி ஆட்டம்
ஸ்பெயின் நாட்டின் முக்கிய டென்னிஸ் தொடரான மாட்ரிட் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் இரட்டையர் பிரிவில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்தியாவின் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி இறுதிக்கு முன்னேறியது. சனியன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் இறுதி ஆட்டத்தில் ரஷ்ய ஜோடியான காச்சாநோவ் - ரப்லெவ் ஜோடியை எதிர்கொள்கிறது. போபண்ணா - எப்டன் ஜோடி.
இறுதியில் ஸ்வியாடெக்
இந்திய நேரப்படி வெள்ளியன்று அதிகாலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் முதல் நிலை வீராங்கனையும், போலந்து நட்சத்திரமுமான ஸ்வியாடெக், தர வரிசையில் 12-வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் வெரோனிக்காவை 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார்.
இன்று இறுதி ஆட்டம்
சனியன்று இரவு 10 மணிக்கு நடை பெறும் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஸ்வியாடெக், பெலாரஸ் வீராங்கனையும், டென்னிஸ் உலகின் 2-வது இடத்தில் உள்ள சபலென்காவை எதிர்கொள் கிறார். இந்த ஆட்டத்தை டென்னிஸ் டிவி சேனலில் காணலாம்.
குஜராத்தில் இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை ஆட்டம்?
13-வது சீசன் கிரிக்கெட் உலகக் கோப்பை (50 ஓவர்) தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான மைதான விவ ரங்கள் குறித்து தகவல் வெளியாகி யுள்ளது. அந்த தகவலின்படி ஐசிசி தேர்வு செய்துள்ள மைதானங்களில் சென்னை, பெங்களூரு, அகமதாபாத், மும்பை, நாக்பூர், தில்லி, லக்னோ, கவுகாத்தி, ஹைதராபாத், ராஜ்கோட், கொல்கத்தா, திருவனந்தபுரம், இந்தூர், தர்மசாலா ஆகிய மைதானங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டங்கள் குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதா னத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தான் மற்ற அணிகளுடன் விளையாடும் போட்டிகள் சென்னை மற்றும் பெங்களூரு மைதானங்களில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. இது உறுதியான தகவல் இல்லை. ஒரு மாதிரி அறிவிப்புதான். மேலும் பாகிஸ்தான் அணி இன்னும் 13-வது சீசன் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்காக இந்திய வருவது குறித்து அறிவிக்கவில்லை. ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுப்பதால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் ஆட்சேபனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் - 2023
முதலிடத்துக்கு முன்னேறும் சென்னை?
இன்று மும்பையுடன் மோதல்
16-வது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது நடுகட்டத்தை தாண்டி யுள்ள நிலையில், சனியன்று நடைபெறும் 49-வது லீக் ஆட்டத்தில் ஐபிஎல் தொடரில் எலியும் - பூனையுமாக இருக்கும் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் முனைப்பில் சென்னை அணியும், பிளே ஆப் சுற்றுக்கான தகுதி இடத்தை பிடிக்கும் முனைப்பில் மும்பை அணியும், இதுபோக சொந்த பகையை தீர்க்கும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குவதால் இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.