கண்டுகொள்ளாத இந்திய கிரிக்கெட் வாரியம் கோலிக்காக பிரம்மாண்ட பிரியாவிடை அளித்த பெங்களூரு ரசிகர்கள்
வெள்ளிக்கிழமை அன்று கர்நாடக மாநிலம் பெங்க ளூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 58ஆவது லீக் ஆட்டம் நடை பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி நீண்டகாலமாக விளையாடி வரும் பெங்களூரு அணியும், கொல்கத்தா அணிகளும் மோதின. இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப் பட்டது. டாஸ் கூட போட முடியாத சூழ்நிலையில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பெங்களூரு, கொல்கத்தா அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதன் மூலம் பெங்களூரு அணி 17 புள்ளிகளு டன் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. கண்டுகொள்ளவில்லை... பெங்களூரு சின்னசாமி மைதானத் தில் ஐபிஎல் போட்டி நடைபெறவில்லை என்றாலும், அந்த மைதானத்தில் நடை பெற்ற நிகழ்வு கடந்த 48 மணிநேரமாக இணையத்திலும், தொலைக்காட்சி சேனல்களிலும் முக்கிய செய்தியாக வலம் வருகிறது. அந்த சம்பவம் யாதெனில், இந்திய கிரிக்கெட் அணி யின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்ட னுமான விராட் கோலி கடந்த வாரம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். பிரியாவிடை போட்டிகள் ஏதுமின்றி திடீரென ஓய்வு அறிவித்த தால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் கோலிக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எவ்வித சிறப்பு ஏற்பாடுகளையும் செய்யவில்லை. அதாவது கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி யின் போது பெங்களூரு ரசிகர்கள் வழக்கத்திற்கு மாறாக சிவப்பு வண்ண ஜெர்சி (பெங்களூரு ஜெர்சி) அணியா மல், வெண்மை நிற ஜெர்சியுடன் மைதா னத்திற்கு வந்தனர். கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெற்று ள்ளதால் வெண்மை ஜெர்சியுடனும் (டெஸ்ட் போட்டியின் ஜெர்சி வெண்மை), ஜெர்ஸியின் பின்புறத்தில் டெஸ்ட் போட்டிகளில் கோலி படைத்த சாதனை அம்சங்களும் அச்சடிக்கப் பட்டு இருந்தது. கோலிக்காக பிரம்மாண்ட பிரியாவிடை அளித்த பெங்களூரு ரசிகர்களின் செய லால், சின்னசாமி மைதானம் வெண்மை நிறமாக காட்சி அளித்தது.ஆனாலும் மழை காரணமாக போட்டி நடைபெற வில்லை என்பதால் இந்த சம்பவம் பெரியளவில் விளையாட்டு உலகிற்கு உடனே தெரியவில்லை. இருப்பினும் சமூகவலைத்தளங்கள் மூலம் தற்போது கோலிக்கு பெங்களூரு ரசிகர்கள் அளித்த பிரியாவிடை சம்பவம் முக்கிய செய்தியாகவும், சமூக வலைத்தளங் களில் டாப் ஆர்டரிலும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்து.
லீக் 1 கால்பந்து : பிஎஸ்ஜி அணி சாம்பியன்
பிரான்ஸ் நாட்டின் முதன்மையான கால்பந்து போட்டியாக இருப்பது “லீக் 1” தொடராகும். இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டம் சனிக்கிழமை நள்ளிரவு அன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பிஎஸ்ஜி - ஆக்செர்ரே அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி அணி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து 84 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த பிஎஸ்ஜி அணிக்கு “லீக் 1” கோப்பை வழங்கப்பட்டது.
ஐபிஎல் 2025 இன்றைய ஆட்டம்
லக்னோ - ஹைதராபாத்
நேரம் : இரவு 7:30 மணி இடம் : எகானா மைதானம், லக்னோ, உத்தரப்பிரதேசம் சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)