இந்திய அணியின் தலைமை தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 50% ரகசியங்கள், கேப்டன்ஷிப் தொடர்பாக கங்குலி - கோலி இடையேயான மோதல், கோலி - ரோகித் சர்மா இடையேயான ஈகோ பிரச்சனை, இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிட்டாக (வலுவான உடல்வாகு) இருக்க 80% உடல் தகுதியோடு இருக்கும் போதே ஊசி செலுத்துகிறார்கள் என பல்வேறு விஷயங்களை “ஸ்டிங் ஆபரேஷன்” கூற, அதனை “ஜீ நியூஸ்” நிறுவனம் வெளியிட்டு இந்திய கிரிக்கெட் உலகிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. சேத்தன் சர்மாவின் “ஸ்டிங் ஆபரேஷன்” இந்திய கிரிக்கெட் உலகை மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் சர்ச்சை செய்தியாக டிரெண்ட் ஆகி வருகிறது. ஆஸ்திரேலியா ஊடகங்களின் திட்டத்தில் சேத்தன் சர்மா சிக்கி உள்ளதாகவும், குடிபோதையில் மனதில் இருந்த விஷயங்களை உளறி இருக்கலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் (?) மூலம் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு ஏன்?
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர் - கவாஸ்கர் டிராபி என்ற பெயரில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் ஆட்டத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெறும் கனவோடு இருக்கும் ஆஸ்தி ரேலியா படுதோல்வி அடைந்தது. இந்த படுதோல்வியால் ஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்திய மைதானங்கள், ஜடேஜாவின் பந்து சேத சர்ச்சை என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி யது. அதனால்தான் சேத்தன் சர்மாவின் “ஸ்டிங் ஆபரேஷன்” விவகாரத்தில் ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு தொடர்பு இருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இதுதொடர் பாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் எதுவும் விளக்கமோ, விமர்சனமோ செய்யவில்லை.
ஜெய் ஷா கட்டுப்பாட்டில் மர்ம குகையாக மாறும் பிசிசிஐ
ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பிசிசிஐ செயலாளராக உள்ளார். கங்குலி இந்திய கிரிக்கெட் வாரியத் (பிசிசிஐ) தலைவராக இருந்த காலம் வரை ஜெய் ஷா அமைதியாக இருந்தார். சொல்லப்போனால் இந்திய கிரிக்கெட் வாரியமும் சற்று வெளிப்படையாக இருந்தது. கங்குலி விடைபெற்று தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக ரோஜர் பின்னி உள்ளார். ரோஜர் பின்னி தலைவராக இருந்தாலும், முக்கிய முடிவுகள், அதிகார உத்தரவுகள், பொறுப்புகள் என கிட்டத்தட்ட இந்திய கிரிக்கெட் வாரியமே பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிடம் உள்ளது. ஜெய் ஷாவின் கையில் பிசிசிஐ பொறுப்பு கொடுக்கப்பட்டதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள், பல ரகசிய மான செயல்பாடுகள், இந்திய கிரிக்கெட் உலகில் என்ன நடக்கிறது என்பதே அறிய முடியாமல் இருந்தது. புரியும்படி சொன்னால் பிசிசிஐயிலிருந்து எந்த தகவலையும் பெற முடியாதபடி ஒரு மர்ம குகை போன்று இருக்கும் நிலையில், பிசிசிஐ என்ற மர்ம குகையின் அச்சாணியை கழற்றும் நோக்கத்தின் தொடக்க வேலையில் சேத்தன் சர்மா - ஸ்டிங் ஆப்ரேசன் - ஜீ நியூஸ் கூட்டணி களமிறங்கியுள்ளது.
கேப்டவுன்
மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்
இன்று 2 லீக் ஆட்டங்கள்
8-வது சீசன் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்று வரும் இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், வெள்ளியன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது.
நியூசிலாந்து - வங்கதேசம் (12-வது லீக்)
நேரம் : மாலை 6:30 மணி
இடம் : கேப்டவுன்
மே.இ.தீவுகள் - அயர்லாந்து (13-வது லீக்)
நேரம் : இரவு 10:30 மணி
இடம் : கேப்டவுன்