2 நாட்கள் ஓய்வு
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வரும் 9-வது சீசன் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காலிறுதி ஆட்டத்தின் களைப்பை போக்க ஞாயிறு, திங்கள் என இரண்டு நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்தியாவின் சுதந்திர நாளான (ஆக., 15) செவ்வா யன்று அரையிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன. முதல் அரையிறுதியில் ஸ்பெயின் - சுவீடன் அணிகள் மோதுகின்றன.
“ஹெட் சாட்”டில் திணறும் பெண்கள்
கால்பந்து விளையாட்டில் மிக முக்கியமானது ஹெட் சாட் (பந்தை தலையால் முட்டி தள்ளுவது). இது சற்று சிரமமான செயல்முறை ஆகும். கார ணம் முறையான பயிற்சி பெற வேண்டும். 100 கிமீ அதிகமான வேகத்தில் வரும் பந்தை தலையால் முட்டித்தள்ளுவது சாதாரண விஷயம் அல்ல. கணிப்பு, கவனம் சிதறி முகத்தில் பந்து பட்டால் மூக்கு உடையும், பற்கள் சிதறும், காது பகுதியில் பட்டால் காதின் சவ்வு கூட கிழி யும். இதனால் பந்தை தலையால் முட்டு வது சற்று ஆபத்தான செயல்முறையா கும். ஆடவர் பிரிவில் வீரர்கள் கடினமான ஜிம் பிரிவு உடற்பயிற்சி செய்வதாலும், தலையால் முட்டுவதற்கு கூடுதல் பயிற்சி செய்வதால் அவர்கள் எளிதாக இந்த பிரிவை சமாளிக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு இது மிகவும் கடினமான பகுதியாக உள்ளது. கால்பந்தில் ஆட வரை போல வேகமாக ஓடுவது, ஆக்ரோஷ மாக பந்தை உதைப்பது, புத்திக்கூர்மையு டன் பந்தை நகர்த்துவது என அனைத்தி லும் மகளிர் பிரிவு முன்னேறி விட்டது. ஆனால் குறிபார்த்து பந்தை தலையால் முட்ட மட்டுமே திணறுகிறார்கள். இதை எப்பொழுது பழக போறாங்களோ! 5 மிக முக்கிய காரணம் : 1.முகத்தில் பட்டுவிடுமோ என்ற பயம் அதிகம். 2. அதிக தலைமுடியால் அசவுகரியத்தை எதிர்கொள்கிறார்கள். இதனால் தலை யால் பந்தை முட்ட சிரமம் ஏற்படுகிறது. 3. பந்து வருவதற்கு முன்னரே ஒரு வித எச்சரிக்கையில் பயந்து தடுமாறி கீழே விருவதால் பந்தை முட்ட முடியவில்லை. 4. வீராங்கனைகள் தலைக்கு தலை முட்டி விடுவார்கள் என்ற பயம் 5. ஷூ (காலணி) கிளிட் (ஆணி) தலையில் முகத்தில் குத்தி காயத்தை ஏற்படுத்தி விடுமோ என அச்சம் காரணமாக தலை யால் பந்தை முட்ட தயக்கம்.
சாம்பியன்ஸ் இல்லாமல் நகரும் உலகக்கோப்பை வரலாற்றில் இதுவே முதல் முறை
நடப்பு சீசன் உலகக்கோப்பை தொ டரில் அரையிறுதி ஆட்டங்கள் செவ்வாயன்று தொடங்கவுள்ளன. இது வரை 8 சீசன் மகளிர் உலகக்கோப்பை நடந்துள்ள நிலையில், சாம்பியன்ஸ் அணிகள் இல்லாமல் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டங்கள் நடக்க இருப் பது இதுவே முதல் முறையாகும். இதற்கு காரணம் நடப்பு சீசனில் அனுபவத்தில் சின்னஞ்சிறிய அணிகள் சாம்பியன் அணிகளை புரட்டியெடுத்தது காரண மாகும். நடப்பு சீசன் சாம்பியன்ஸ் அணிகளின் நிலைமை: 1. ஜெர்மனி - லீக் சுற்றில் (கொலம்பியா அணியிடம் தோற்றதால் புள்ளிகள் கிடைக்கவில்லை) 2. நார்வே - நாக் அவுட் சுற்றில் (ஜப்பான் அணியிடம்) 3. அமெரிக்கா - நாக் அவுட் சுற்றில் (சுவீடன் அணியிடம்) 4. ஜப்பான் - காலிறுதியில் (சுவீடன் அணியிடம்) சுவீடன் அணி 2 சாம்பியன் அணி களை வெளியேற்றி நடப்பு சீசன் உலகக் கோப்பை தொடரை மிரட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சனியன்று நடைபெற்ற 3-வது காலிறுதி ஆட்டத்தில் உள்ளூர் அணியான ஆஸ்திரேலி யாவும், பிரான்ஸ் அணிகளும் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முழு நேர முடிவில் (90 நிமிடம்), கோலடிக்கவில்லை. கூடுதல் நேரம் (30 நிமிடம்) வழங்கப்பட்ட பொழுதிலும் கோலடிக்கா மல் ஆட்டம் சமனில் நிறைவு பெற்றதால் பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. மிக மிக பரபரப்பாக நகர்ந்த பெனால்டி சூட் அவுட்டில் ஆஸ்திரேலிய அணி 7-6 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை யிறுதிக்கு முன்னேறியது.