games

img

மைதானத்தில் மின்னல் தாக்கி கால்பந்து வீரர் பலி

மைதானத்தில் மின்னல் தாக்கி கால்பந்து வீரர் பலி
ஆப்பிரிக்க கண்டத்தில் நகர வளர்ச்சி வீதம் குறை வாக இருப்பதால், காடுகளை ஒட்டி அமைக்கப் படும்  கால்பந்து மைதானங்களில் இடி, மின்னல் தாக்குதல் சம்பவங்கள் வீரர்கள் உயிரிழப்பு சம்பவம் சர்வசாதாரண மாக அடிக்கடி அரங்கேறும். மற்ற கண்டங்களில் கால்பந்து  மைதானங்கள் நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் இது போன்ற சம்பவம் பெரும்பாலும் அரங்கேறுவது கிடையாது. ஆனால் இந்தோனேசியா நாட்டில் போதுமான அளவு நகர கட்டமைப்பு இருந்தும், அங்கு கால்பந்து மைதானங்களில் மின்னல் தாக்கும் சம்பவம் தொடர்ச்சியாக அரங்கேறிவருகிறது.

கடந்த சனியன்று இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா வின் பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்தில் பாண்டுங் மற்றும் சுபாங் அணிகளுக்கு இடையே நட்பு ரீதி யான கால்பந்து போட்டி நடைபெற்றது. மாலை 4.20 மணியள வில், இரு அணி வீரர்களும் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மைதானத்தில் திடீரென மின்னல் தாக்கியது. மின்னல் தாக்குதலில் சுபாங் அணியை சேர்ந்த 35 வயதான கால்பந்து வீரர் செப்டெய்ன் ரெஹர்ஜா படுகாய மடைந்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழி யிலேயே செப்டெய்ன் ரெஹர்ஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

300 மீட்டர் உயரத்தில் மின்னல்
மேற்கு ஜாவாவில் தற்போது மழைக்காலம் என்ற நிலை யில் சனியன்று மோசமான வானிலை காரணமாக வானம்  கருமேகம் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், மைதானத்தி லிருந்து 300 மீட்டர் உயரத்தில் மின்னல் தோன்றியதால் இந்த  அசம்பாவிதம் நிகழ்ந்ததாக வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தோனேசியா வில் கால்பந்து வீரர் ஒருவர் மீது மின்னல் தாக்கியதில் அவர் தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளப் போட்டியை விட்டுவிட்டு ஒலிம்பிக் போட்டியில் விளையாட வரவேண்டும்

மெஸ்ஸிக்கு அர்ஜெண்டினா உத்தரவு

இந்த ஆண்டு ஜூலை மாதம் 26-ஆம் தேதி 33-ஆவது ஒலிம்பிக் விளை யாட்டு போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தொடங்க உள்ளன. இதற் கான ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வரும் நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் நாட்டுக்காக விளை யாட வர வேண்டும் என கால்பந்து  உலகின் நட்சத்திர வீரரும், அர்ஜெண்டி னா அணியின் கேப்டனுமான மெஸ்ஸி க்கு, அர்ஜெண்டினா அணியின் தேசிய நிர்வாகி ஜேவியர் மஸ்செரானோ அழைப்பு விடுத்துள்ளார். 

இந்த அழைப்பு தொடர்பாக மெஸ்ஸி இன்னும் எவ்வித கருத்தை யும் தெரிவிக்கவில்லை என்றாலும், அர்ஜெண்டினா விளையாட்டு அமைச்சகம் சார்பில் மெஸ்ஸியிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாட்டுக்காக அழைத்தால் வந்துதான் ஆக வேண்டும்
2022-ஆம் ஆண்டு உலகக்கோப் பையை அர்ஜெண்டினா நாட்டிற்கு பெற்றுக் கொடுத்த 36 வயதாகும் லயோனல் மெஸ்ஸி தற்போது அமெ ரிக்க கால்பந்து கிளப் அணியான இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வரு கிறார். அர்ஜெண்டினா அணியின்  தேசிய நிர்வாகி ஜேவியர் மஸ்செரானோ அழைப்பு தொடர்பாக இன்டர் மியாமி அணி நிர்வாகத்திடம் அனுமதி கோர வேண்டும் என தகவல்  ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் இன்டர் மியாமி அணியின் அனுமதி தேவையில்லை. அர்ஜெண்டினா விளையாட்டுத்துறை அமைச்சகம்  உத்தரவிட்டாலே போது மானது. அவர் அர்ஜெண்டினா குடி மகன் ஆவார். அதனால் நாடு தான் முக்கியம். கிளப் அணி முக்கியமல்ல. நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சகம் என்ன சொல்கிறதோ அதை கேட்டுத்தான் ஆக வேண்டும்.