games

img

ஆசிய மகளிர் கால்பந்து கோப்பை: அணியில் இடம்பெற்ற 5 தமிழக வீராங்கனைகள்  

ஆசிய மகளிர் கால்பந்து கோப்பை தொடருக்கான 23 பேர் அடங்கிய இந்திய மகளிர் அணியில் 5 தமிழக வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளன.  

ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டி வருகிற 20 ஆம் தேதி முதல் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மூன்று மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, சீனா, சீன தைபே, ஜப்பான், தென்கொரியா, வியாட்நாம், மியான்மர், ஈரான் ஆகிய 12 நாடுகள் பங்கேற்கின்றன. இந்திய அணி குரூப் ஏ-வில் இடம் பெற்றுள்ளது.  

இந்த நிலையில் ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்துமதி, சந்தியா, கார்த்திகா, சவுமியா, மாரியம்மாள் ஆகிய 5 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.  

இந்திய வீராங்கனைகளின் விவரம்:  

அதிதி சவுகான், மாய்ப்பம் தேவி, சௌமியா (கோல் கீப்பர்கள்), டாலிமா சிப்பர், சுவீட்டி தேவி, லிதுராணி, ஆஷா லதா தேவி, மணீஷா பன்னா, ஷில்கி தேவி, சஞ்சு யாதவ் (டிஃபெண்டர்கள்), கமலாதேவி, அஞ்சு தமங், கார்த்திகா அங்கமுத்து, ரத்தன்பாலா தேவி, பிரியங்கா தேவி, இந்துமதி கதிரேசன் (மிட்பீல்டர்கள்), மணீஷா கல்யாண், கிரேஸ் டாங்மாய், தியாரி, ரேணு, சுமதிகுமாரி, சந்தியா ரங்கநாதன், மாரியம்மாள் பாலமுருகன் (ஃபார்வேட்ஸ்).தலைமை பயிற்சியாளர் தாமஸ் டென்னார்பி.  

ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டி 1980க்கு பிறகு முதல் முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. மேலும் 2023 ஆம் ஆண்டு நடைபெறும் பிஃபா உலகக்கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று போட்டி ஆகும்.               

;