games

img

போராடும் விவசாயிகளுக்கு ரூ.7 லட்சம்  வழங்கிய  அமெ.விளையாட்டு வீரர்....

வாஷிங்டன்:
விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் மருத்துவச் செலவுக்காக அமெரிக்க விளையாட்டு வீரர் ஜூஜூ ஸ்மித் சூஸ்டர் ரூ. 7.28 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
மத்திய பாஜக  அரசின் வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக்கோரி 73ஆவது நாளாக விவசாயிகள் மிகுந்த உறுதியுடன் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். நாடுமுழுவதும் உள்ள மக்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து  வருகின்றனர்.

இந்நிலையில் தில்லியில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளின் மருத்துவச் செலவுக்காக ரூ. 7.28 லட்சம் நிதியுதவிவழங்கியுள்ளதாக  அமெரிக்க  ரக்பி லீக் (என்எஃப்எல்) வீரர் ஜூஜூ ஸ்மித் சூஸ்டர் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில், உயிர்களைக் காப்பதற்காக, இந்தியாவில் உள்ள விவசாயிகளின் மருந்துச் செலவுக்கு ரூ.7.28 லட்சம் (10 ஆயிரம் டாலர்) நிதியுதவி வழங்கி உள்ளேன்.இதன்மூலம் எந்தவொரு உயிரிழப்பையும் நாம் தடுக்க முடியும் என எண்ணுகிறேன் என்று தெரிவித்துள்ளார். விவசாயிகள் போராட்டம் குறித்த ஒரு செய்தியையும் தனது டிவிட்டர்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

;