திருப்பூர், ஜூன் 11- ஹரியானா மாநிலம் பஞ்சுகுலாவில் நடைபெற்ற கேலோ இந்தியா யூத் களரி விளையாட்டு போட்டியில் 40 கிலோ பிரிவில் மடத்துக்குளம் மாணவர் சுர்ஜித் தங்கம் வென்று சாதனை படைத்தார். இவ ரது தந்தை ஆர்.வி.வடிவேல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மடத்துக்குளம் தாலுகா செயலாளர் ஆவார். கேலோ இந்தியா யூத் கேம் விளை யாட்டுப் போட்டிகள் ஜுன் மாதம் 3 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஹரியானா மாநிலம் பஞ்சுகுலாவில் நடைபெறுகிறது. இதில் 25 வகையான விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. முதல் முறையாக களரிப் போட்டிகள் இந்திய களரிப் பயட்டு பெடரேசன் பொது செயலாளர் அட்வகேட் பூந்துரசோமன் முயற்சியில் ஜூன் மாதம் 10,11,12 ஆகிய மூன்று நாள் நடைபெறு கிறது. இதில் போட்டிக்குத் தேர்வான 17 வய திற்கு உட்பட்ட 25 வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் தமிழ்நாடு களரிப் பயட்டு சங்கம் சார்பாக கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒன்றிய அரசு சார்பாக சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. சுவடுகள், மெய் பயட்டு, உருமி வீசல், ஹை கிக், வடிபயட்டு, வாளும் பரிச்சா போன்ற பிரிவின் கீழ் விளையாட உள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் தமிழ்நாடு களரிப் பயட்டு சங்கச் செயலா ளர் சு.வீரமணி ஆசான் தலைமையில் பங்கு பெற்றுள்ளனர்.இந்நிலையில் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அகில இந்திய அளவிலான களரிச் சுவடுகள் போட்டி நடைபெற்றது. 40 கிலோவுக்கு உட் பட்டோர் பிரிவில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலூக்கா பாப்பான்குளம் ஊராட்சி ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுர்ஜித் (வயது 8) மிகச் சிறப்பாக விளையாடி தங்கப் பதங்கம் வென்றார். 40 கிலோ களரிச்சுவடுகள் போட்டி யில் தங்கம் வென்ற சுர்ஜித்தின் தந்தை ஆர்.வி. வடிவேல் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மடத்துக்குளம் தாலுகா செயலாளராகவும், திருப்பூர் மாவட்டக் குழு உறுப்பினராகவும் உள்ளார். இவ ரது தாயார் ராதாமணி மடத்துகுளம் தாலுகா குழு உறுப்பினராக உள்ளார். இவர்களுக்கு சுர்ஜித், பகத் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். களரிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சுர்ஜித்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் பி.ஆர்.நடராஜன், சு.வெங்க டேசன் மற்றும் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் தொலைபேசியில் பாராட்டுத் தெரி வித்தனர்.