games

img

விளையாட்டு செய்திகள்

பிரதமர் மோடியின் ஷூட்டிங்கில் வினேஷ் போகத், நீரஜ் சோப்ரா பங்கேற்கவில்லை

ஒன்றிய பாஜக அரசு அழைப்பு விடுக்கவில்லையா? அவர்களாகவே புறக்கணித்தனரா?

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் மொத்தம் 117 வீரர்கள் பங் கேற்றனர். கடந்த டோக்கி யோ சீசனை காட்டிலும் இந்திய வீரர் - வீராங்க னைகள் சொதப்பலான ஆட் டத்தை வெளிப்படுத்திய நிலையில், ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களுடன் 71ஆவது இடத்துடன் மிக மோசமான செயல்பாட்டுடன் இந்தி யர்கள் நாடு திரும்பினர்.

இந்நிலையில், நாட்டின் 78ஆவது சுதந்திர தின விழா  நிகழ்விற்கு பிறகு தில்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது வீட்டில் பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர் - வீராங்கனை களுக்கு சிறப்பு ஷூட்டிங்கு டன் பிரதமர் மோடி விருந்த ளித்தார். ஒலிம்பிக்கில் சாதி த்த வீரர் - வீராங்கனைகளின் பதக்கம் மற்றும் அவர் களின் விளையாட்டுப் பொருட் களை கையில் பிடித்து, வாழ்த்து தெரிவிப்பது போல மோடியின் ஷூட்டிங் நடைபெற்றது. ஆனால் இந்த ஷூட்டிங்கில் இரண்டு முக்கியமான நட்சத்திரங்கள் பங்கேற்கவில்லை. இந்த  விவகாரம் பெரும் சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது. 

பதக்கத்திற்காக இறுதி வரை போராடிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பாரீஸ் ஒலிம்பிக் கில் ஒரே ஒரு வெள்ளியை பெற்றுக்கொடுத்து நாட்டின் மானத்தை காப்பாற்றிய நீரஜ் சோப்ரா ஆகிய இரு வரும் பிரதமர் மோடியின் ஷூட்டிங்கில் பங்கேற்க வில்லை.

பாஜக மீது  வலுக்கும் சந்தேகம்

பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., பிரிஜ் பூஷணின் பாலியல் வக்கி ரத்திற்கு எதிராக போராடி யதன் காரணமாக, அரசியல் சூழ்ச்சியால் 100 கிராம் எடைக்காக வினேஷ் போகத் இறுதிப் போட்டி யில் தகுதி நீக்கம் செய்யப் பட்டார் என குற்றச்சாட்டு எழுந்தன. சமூகவலைத் தளங்களில் விளையாட்டு ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்கள், நெட்டிசன்கள் வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்திற்கு மோடி அரசே காரணம் என வெளிப் கடையாக மீம்ஸ், கார்ட்டூன் களை வெளியிட்டனர்.

அதே போல ஈட்டி எறித லில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவி, அதே ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அஷ்ரத் நதீமை எனது மகன் என கூறினார். இந்த விவகாரம் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சகோத ரத்துவத்தை போற்றிய நிலையில், பாஜகவின் வகுப்புவாத அரசியல் பந்தாடப்பட்டது. 

மேற்குறிப்பிட்ட சம்பவங்களால் வினேஷ் போகத், நீரஜ் சோப்ரா ஆகிய இருவருக்கும் மோடி அரசு அழைப்பு விடுக்க வில்லையா? இல்லை, அவர் களாகவே பிரதம ரின் விருந்தை புறக்கணித்த னரா? என பல்வேறு சர்ச்சை கள் வட்டமடித்து வரு கின்றன.

புரோ கபடியும்... ஏலமும்...

புரோ கபடியின் 11ஆவது சீசன் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தொடருக்கான ஏலம் ஆகஸ்ட் 14, 15 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. 

டாப் தொகையில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்
1. சச்சின்- ரூ. 2.15 கோடி (தமிழ் தலைவாஸ்)
2. முகமதுரெசா - ரூ. 2.07 கோடி (ஹரியானா) 
3. குமான் சிங் - ரூ. 1.97 கோடி (குஜராத்)
4. பவன் செராவத் - ரூ.1.72 கோடி (டைட்டன்ஸ்)
5. பரத் - ரூ. 1.30 கோடி (உ.பி., யோத்தாஸ்)
6. மணிந்தர் சிங் - ரூ.1.15 கோடி (பெங்கால்)
7. அஜிங்கியா பவார் - ரூ. 1.10 கோடி(பெங்களூரு)
8. சுனில் குமார் - ரூ. 1.05 கோடி (மும்பை)
9. மன்ஜீத் சிங் - ரூ. 80 லட்சம் (மும்பை)
10. ஷுபம் ஷிண்டே - ரூ.70 லட்சம் (பாட்னா) 

மற்ற வீரர்கள் 
ரூ. 65 லட்சத்துக்கும் குறைவான தொகையில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.