வினேஷ் போகத்திற்கு தங்கப்பதக்கம்
ஹரியானா சர்வ்காப் பஞ்சாயத்து வழங்கியது
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இறுதி வரை முன் னேறிய நிலையில், 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் வினேஷ் போகத் கடைசி நேரத்தில் அர சியல் உள்ளிட்ட சதிகளால் ஒலிம்பிக் பதக்கத்தை இழந்தார். வினேஷ் போகத் தகுதி நீக்க சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒலிம்பிக் கில் பதக்கம் வெல்லாவிட்டாலும் இந்தி யாவின் “தங்க மகள் (தங்கப்பதக்கம் வென்றவர்) என ஒட்டுமொத்த நாடே இன்று வரை வினேஷ் போகத்தை கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், வினேஷ் போகத் பிறந்த நாளான ஆகஸ்ட் 25 அன்று ஹரியானா மாநிலத்தின் ஜஜ்ஜார் பகுதியில், ஹரியானா சர்வ்காப் பஞ்சா யத்து (ஜாட் மற்றும் குஜ்ஜார்) சங்கம் சிறப்பு விழாவை நடத்தி அவருக்கு சொந்த செலவில் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்தது. இந்த விழாவில் பேசிய வினேஷ் போகத்,”ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வாங்காதது வருத்தமளிக்கிறது. நான் உடல் அள வில் விளையாட தயாராக உள்ளேன். ஆனால் மனதளவில் உடைந்து விட்டேன். குறிப்பாக தன்னைப் போல் யாரும் விளையாட்டில் இருந்து வெளியே வரக்கூடாது. மக்களின் அன்பையும், பாராட்டையும் பார்த்த பிறகு, இதைவிட வேறு எதுவும் தேவை யில்லை என்ற எண்ணம் வந்துள்ளது. நான் மக்களுடன் இருக்கிறேன். எதிர் காலத்தில் என்ன செய்யப் போகிறேன் என தெரியவில்லை. எனினும் எனது போராட்டம் முடிவடையவில்லை, இப் போதுதான் தொடங்கியுள்ளது” என அவர் கூறினார்.
வினேஷ் போகத் போலவே ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த போட்டி யில் வெண்கலப் பதக்கம் வென்ற அமான் ஷெராவத்துக்கு பண மாலை அணிவித்தும், தலா 5 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கி யும் கவுரவிக்கப்பட்டார்.
5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டிகளில் முன்கணிப்பு தேவையா?
வித்தியாசமான விளக்கம் அளிக்கும் பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத்
கிரிக்கெட் உலகில் ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பாகிஸ்தான் அணியை முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி வங்கதேச அணி புதிய வரலாறு படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத் தில் வீழ்த்திய முதல் அணி என்ற புதிய சாதனையையும் வங்கதேசம் படைத்துள்ளது.
இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் வித்தி யாசமான விளக்கம் அளித்துள்ளார்.அதில், “ராவல்பிண்டி பிட்ச் எதிர்பா ர்த்ததை போல் அமையவில்லை. கடந்த 9 நாட்களாக இங்கு மழைபெய்து வந்தது. அதனால் ராவல்பிண்டி வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் அது தவறாகிவிட்டது. சில தவறான கணிப்புகள் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்தப் போட்டியில் செய்த தவறுகளை வரும் நாட்களில் சரி செய்வோம்” எனக் கூறினார்.
ராவல்பிண்டி பிட்ச் எந்தவிதத்தில் இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் கண்டிப்பாக வேகம், சூழல் பந்துவீச்சா ளர்களை களமிறக்கியே ஆக வேண்டும் என்பதே நடைமுறையாகும். காரணம் டெஸ்ட் போட்டி 5 நாட்கள் நடைபெறு வதால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் பிட்சின் தன்மை மாறும். அதாவது முதல் 2 நாட்கள் பிட்ச் பகுதி வேகத்திற்கு ஒத்துழைத்தால், கடைசி 3 நாட்கள் சுழலுக்கு மாறும். இதனால் டெஸ்ட் போட்டிகளில் வேகம், சூழல் கண்டிப்பாக வேண்டும். டெஸ்ட், ஒருநாள் போட்டி மனநிலையில் வேகப்பந்துவீச்சாளர்களை மட்டும் களமிறக்கி 2ஆம் தர அணியான வங்கதேச அணியிடம் வரலாற்று படுதோல்வியை சந்தித்துள்ளதற்கு கேப்டன் ஷான் மசூத்தின் தவறான முடிவே காரணம் ஆகும்.
ரமீஸ் ராஜா சாடல்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் படுதோல்வி குறித்து கிரிக்கெட் வர்ணனையாளரும், முன்னாள் வீரருமான ரமீஸ் ராஜா கூறுகையில், “ராவல்பிண்டி போன்ற மைதானத்தில் ஒரு சுழற்பந்துவீச்சாளர் இல்லாமல் கூட பாகிஸ்தான் அணி களமிறங்கியது ஆச்சரியமாக உள்ளது. வங்கதேச அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் 16 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர். இந்த சூழலில் எப்படி 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் முடிவை கேப்டன் மசூத் எடுத்தார் என்று தெரியவில்லை. மேலும் மசூத்தின் பேட்டிங்கும் மோசமாக உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் மசூத் அணியில் நீடிப்பதே சிரமம் தான்” என பாகிஸ்தான் வீரர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.