அமித் ஷா மகன் ஜெய் ஷாவால் இந்திய அணி நிர்வாகத்திற்குள்ளேயும் ஆரம்பித்தது உள்குத்து
ஹர்திக் பாண்டியா தேர்வுக்கு ரோகித் சர்மா, அகார்கர் கடும் எதிர்ப்பு
மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா நாடுகளில் கூட்டாக நடைபெறும் 9ஆவது சீசன் டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஜூன் 1 அன்று தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் 15 அணிகளும் தங்களது வீரர்கள் விபரத்தை சமீபத்தில் வெளி யிட்ட நிலையில், இந்திய அணி விபரம் மட்டும் இன்னும் சர்ச்சை பொருளாகவே உள்ளது. இதற்கு காரணம் ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழ்நாடு வீரர் நடராஜன், சப்மன் கில், ரிதுராஜ் ஹெய்க்வாட், ரிங்கு சிங், ரியான் பராக் உள்ளிட்ட சில வீரர்களை தேர்வு செய்யா மல், பார்மில் இல்லாத ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார், அக்சர் படேல், அர்ஷதீப் சிங் உள்ளிட்டோர் களை தேர்வு செய்ததற்கு இன்று வரை கடும் கண்டனங்கள் குவிந்து வரு கின்றன. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இதுவரை உறுதி யான பதில் அளிக்காமல் அமைதி யாக உள்ளது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், “பார்மிலேயே இல்லாத ஹர்திக் பாண்டியாவை உலகக்கோப்பை டி-20 அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், அழுத்த த்தின் பேரில் மட்டுமே ஹர்திக் பாண்டி யாவை அணியில் துணை கேப்டனாக களமிறக்க முடிவு செய்தோம்” என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் கூறியதாக பிரபல இந்தி ஊடகமான டைனிக் ஜாக்ரன் கூறியுள்ளது. எனினும் யாருடைய அழுத்தத்தின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரோகித் சர்மா, அஜித் அகார்கர் கருத்துக் கூறவில்லை.
ரோகித் சர்மா ஓய்வு?
5 முறை மும்பை அணிக்கு ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை நடப்பு ஐபிஎல் சீசனில் நீக்கி, ரசிகர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே ஹர்திக் பாண்டியாவின் ஆசைப்படி அவரை கேப்டனாக நியமித்தது மும்பை அணி நிர்வாகம். இதனால் அணிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பி, வீரர்களுக்கு இடையே பிளவு ஏற்பட்டதால் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்று நிறைவு பெறும் முன்னரே வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது. 5 முறை சாம்பியனான மும்பை அணியின் இந்த நிலைமைக்கு காரணம் ஹர்திக் பாண்டியாவின் தேர்வு மற்றும் கேப்டனாக நியமித்தது தான்.
இந்நிலையில், மும்பை அணியை போன்று இந்திய அணிக்குள்ளேயும் ஹர்திக் பாண்டியா தேர்வால் குழப்பம் மற்றும் பிளவு ஏற்பட்டுள்ள சூழலில் ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாக பிசிசிஐ பேசிவருவதற்கு கேப்டன் ரோகித் சர்மா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும்,”ஹர்திக் பாண்டியா டி-20 கிரிக்கெட் வடிவத்தின் நிரந்தர கேப்டனாக பார்க்கப்படுவதால், அவரை அணியில் இருந்து நீக்க முடியாது” என பிசிசிஐ கூறியதாக டைனிக் ஜாக்ரன் கூறியுள்ள நிலையில், ரோகித் சர்மா சர்வதேச டி-20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓய்வு தொடர்பான அறிவிப்பு டி-20 உலகக்கோப்பை தொடங்கிய பின்னர் அறிவிக்கப்படும் என ரோகித் சர்மாவிற்கு நெருங்கியவர்கள் தகவல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய் ஷா மீது சந்தேகம்?
“அழுத்தத்தின் பேரில் மட்டுமே ஹர்திக் பாண்டியாவை அணியில் துணை கேப்டனாக களமிறக்க முடிவு செய்தோம்” என்ற ரோகித் சர்மா, அஜித் அகார்கரின் பிரச்சனை தொடர்பாகவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மீதே சந்தேகம் வலுத்து வருகிறது. காரணம் பிசிசிஐ நிர்வாகத்திற்குள் அமித் ஷா மகன், ஜெய் ஷா காலடி வைத்த நாள் முதல் இந்திய அணி தடம் புரண்ட ரயில் போலவே முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக அணி நிர்வாகத்திற்குள் எப்பொழுது பார்த்தாலும் எதாவது பிரச்சனை தான். பிரச்சனை இல்லாமல் இந்திய அணி ஒரு தொடரை கூட நிம்மதியாக விளையாடியது கிடையாது. இதற்கிடையில் பாஜக - ஆர்எஸ்எஸ் கொள்கையை பிரதிபலிக்கிறேன் என்று “காவி” வண்ணத்தை இந்திய அணியின் ஜெர்சிக்குள் நுழைத்து ரசிகர்களிடம் கண்டனத்தை பரிசாக பெற்று வருகிறார் ஜெய் ஷா. இதனால்தான் ஹர்திக் பாண்டியா விவகாரம் மூலம் இந்திய அணிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுக்கும் ஜெய் ஷா மீதும் பலத்த சந்தேகம் வலுத்துள்ளது.
ஐபிஎல் 2024 இன்றைய ஆட்டம்
ராஜஸ்தான் - பஞ்சாப்
(65ஆவது ஆட்டம்)
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : கவுகாத்தி, அசாம்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்,
ஜியோ சினிமா (ஒடிடி - இலவசம்)