மனநல மருத்துவர் ஷாலினி
அமெரிக்காவுக்கு போய் அப்ரஹாம் லிங்கன் சிலையை உடைப்பீர்களா?
தென்னாப்ரிகாவுக்கு போய் நெல்சன் மண்டேலா சிலையை உடைப்பீர்களா?
மாட்டீர்கள் தானே?
ஏன் மாட்டீர்கள்?
ஏன் என்றால் அவர்கள் அந்தந்த நாட்டின் மிக சிறந்த சீர்திருத்தவாதிகள். அவர்களால் அந்த நாட்டிற்கே பெருமை. அவர்களது சிலை நமக்கு ஒரு போட்டே எடுக்கும் வாய்ப்பு.
அதே போலத்தானடா அம்பேட்கரும்!
அவர் நம் அனைவருக்கும் பரிபூரண சுதந்திரம் வாங்கித்தந்தவர்.
நம் அனைவருமென்றால், அவர் வெறும் ஒரு தலித் தலைவர் மட்டும் தானே?
இல்லை மகனே, அவர் ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கே தலைவர். அவர் தான் பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள், பணியாளர்கள், என்று எல்லோருக்கும் சாதகமாக சட்டங்களை கொண்டு வந்தார். அவர் அப்படிப்பட்ட சட்டங்களை கொண்டுவரவில்லை என்றால் நாம் இன்னமும் ஒரு காட்டுமிராண்டித்தனமான நாடாக இருந்திருப்போம்.... அவர் தன் ஜாதிக்காக மட்டுமே பாடுபட்டார் என நினைப்பது அறியாமை. Haves and Have nots எனும் இந்த அடிப்படை பிரிவில் அவர் சகலமான ஹாவ் நாட்ஸுக்கும் உரிமை பெற்று தந்தவர்.
அவர் சிலையை உடைப்பது எப்பேற்பட்ட முட்டாள்தனம்? எந்த அமெரிக்கனாவது லிங்கன் சிலையை உடைப்பானா? எந்த அப்ரிக்கனாவது மண்டேலா சிலையை உடைப்பானா?
அதே போல எந்த இந்தியனும் அம்பேட்கர் சிலையை உடைக்கக்கூடாது ராஜா...
அப்படியும் மீறி உடச்சா உன்னை பத்தி என்ன சொல்லுவாங்க?
ஒரு சிலைக்கிட்ட போய் வீராப்பு காட்டுறானே, இவனுக்கு என்னமோ கோளாறுனு சொல்லுவாங்க...
இது நமக்கு தேவையா?
யோசிக்கணும்.....
-மனநல மருத்துவர் ஷாலினி