அவர் கட்சியின்
உறுப்பினர் இல்லை.
ஆனாலும் அவர் கொடையாக
அளித்த ரூபாய் ஐம்பது லட்சம்
மதிப்பிலான இடத்தில் கம்பீரமாக
உயர்ந்து நிற்கிறது
ஜோதிபாசு நினைவகம்...
ஈரோடு மாவட்டம் கோபியில்
மக்கள் மருத்துவராக
வாழ்ந்து மறைந்த தோழர்
ராஜேந்திரன் அவர்கள்
அளித்த இடத்தில் அவரின்
முதலாம் ஆண்டு நினைவு நாளில்
நடைபெற்ற அலுவலக திறப்பு விழா...
திரைப்படம் ஒன்றில் நீதிபதி
சாப்ளினிடம் கேட்பார்..
"நீ கம்யூனிஸ்டா..?"
சாப்ளின் பதில் சொல்வார்..
"நான் ஹியூமனிஸ்ட்.."
இரண்டும் ஒன்றுதான்,
இவரை சிறையில் தள்ளுங்கள்
என தீர்ப்பளிப்பார் நீதிபதி..
ஆம்.. மனிதாபிமானிகள்
எல்லோருமே கம்யூனிஸ்டுகள் தானே..!
-ஆர்.பத்ரி