election2021

img

மே. வங்கத்தில் கட்சியினர் எதிர்ப்பால் வேட்பாளர்களை மாற்றிய பாஜக... 3 தொகுதிகளுக்கு புதிய நபர்களை பிடித்து வந்தது ...

கொல்கத்தா:
மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில், நான்கு கட்டங்களாக 283 வேட்பாளர் களின் பட்டியலை பாஜக வெளியிட்டு இருந்தது. இதில், 150 வேட்பாளர்கள், அடுத்த கட்சிகளிலிருந்து விலகி வந்தவர்கள் என்பதுடன், இவர்களில் சிலர்பாஜகவிலேயே இல்லாதவர்கள் என்பதால், சீட் கிடைக்காத நீண்ட நாள் உறுப்பினர் கள் கொதித்து எழுந்து விட்டனர். 

ஹூக்ளி, ஜல்பைகுரி, பழைய மால்டா, அரிஸ்சந்திரப்பூர், ஜகடால், தெற்கு நாடியா,ரானாகட், சக்டா மற்றும் வடக்கு 24 பர்கானா மாவட் டத்தின் பல பகுதிகளிலும் பாஜக அதிருப்தியாளர்கள் சொந்தக் கட்சி அலுவலகத் தையே அடித்து, நொறுக்கிச் சூறையாடினர். தீ வைப்பில் ஈடுபட்டனர்.காசிப்பூர் - பெல்கச்சியா,சௌரிங்கீ ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்த தருண் சகா, ஷிகா மித்ரா ஆகியோர்,“யாரைக் கேட்டு எங்களை வேட்பாளர்களாக அறிவித்தீர்கள்?” என்று கொந்தளித்துவிட்டனர். இவர்கள் திரிணாமுல் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதுதெரிந்தும், பாஜக அவர் களை வேட்பாளர்களாக அறிவித்து மோசடியை அரங்கேற்றியிருந்தது.இந்நிலையில், 5-ஆவது கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ள பாஜக, காசிப்பூர்- பெல்கச்சியா, சௌரிங்கீதொகுதிகளின் வேட்பாளர் களை மாற்றியிருப்பதுடன், அலிப்பூர்துவார் தொகுதிக்குவேட்பாளராக அறிவிக்கப் பட்டிருந்த மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அசோக்லாகிரியை, பாலுர்காட் தொகுதிக்கு தூக்கியடித்துள்ளது. ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சுப்ரதா சகாவை, கொல்கத்தாவின் ராச்பீகாரி தொகுதியில் நிறுத்தியுள்ளது.

;