election2021

img

பாஜக ஏவி விட்ட அம்புதான் அசாதுதீன் ஓவைசி... மம்தா பானர்ஜி கடும் சாடல்...

கொல்கத்தா:
பாஜக ஏவி விட்ட அம்புதான் மஜ் லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி என்று, மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் கட்சித்தலைவருமான மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.

ஒவைசியின் பெயரைக் குறிப்பிடாமல் அவரைப்பற்றி பேசியிருக்கும் மம்தா, “ஹைதராபாத்தில் இருந்து ஒருவர் மேற்குவங்கத்திற்கு வந்துள்ளார். அவர் பாஜகவிடம் பணம் வாங்கிக் கொண்டு வந்துள்ளார். அவரை மேற்குவங்க மக்கள் அனுமதிக்கக் கூடாது. அவர் பாஜகவின் பி டீம். பாஜக எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்க வைப்பதுதான் அவரது நோக்கம். அதற்காக பாஜக ஏவி விட்ட அம்பு தான் அவர். அவரிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” குறிப்பிட்டுள்ளார்.மேலும், “மேற்குவங்கத்தில் நான் மட்டும் இந்த தேர்தலில் வென்றால் ஆட்சி அமைத்து விட முடியாது. எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் 291 தொகுதிகளிலும் வெற்றியை பெற வேண்டும். குறைந்தது 225 முதல் 230 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால், சில துரோகிகளின் உதவியுடன் ஐந்து கோடி ரூபாய் வரை அளித்து பாஜக வேட்டையாடி விடும்’’என்றும் அவர் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

;