election2021

img

துப்பாக்கியால் சுட்டுக் கொல்வேன் என்று மிரட்டிய பாஜக தலைவர்.... தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்ட பாஜக தலைவராக இருப்பவர் துருவா சகா. இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு நானூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அப்போது பேசிய அவர், ‘மே 2-ஆம் தேதி மேற்கு மாநிலத்தில் பாஜக ஆட்சியமைக்கும். நாட் டக்குத் துரோகம் செய்பவர்கள், பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்புவோர் அதன் பிறகு போலீஸ் என்கவுண்ட்டரை (சுட்டுக் கொல்லப்படுவர்) சந்திப் பார்கள்’ என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.இந்தப் பேச்சு அடங்கிய வீடியோ பதிவு,சமூக வலைத் தளங்களில் வைரல் ஆனது. பெரும் சர்ச்சைகளையும் ஏற் படுத்தியது. இந்நிலையில், துருவா சகா-வின் இந்த பகிரங்க மிரட்டல் தொடர்பாக, தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் 24 மணி நேரத்துக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

;