election2021

img

புதுவையில் முத்தியால்பேட்டை தொகுதியில் சிபிஎம் போட்டி.... வழக்கறிஞர் ஆர். சரவணன் வேட்பாளராக அறிவிப்பு.....

புதுச்சேரி:
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் முத்தியால்பேட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.  வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சரவணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர் ஆர். சரவணனை அறிமுகம் செய்துவைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் இரா.ராஜாங்கம், மத்தியகுழு உறுப்பினர் சுதா சுந்தரராமன், தமிழ் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகநயி னார், வி.பெருமாள், ஆகியோர்  செய்தியாளர்களிடம் கூறுகையில்,“புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முத்தியால்பேட்டை தொகுதியில் கட்சியின் பிரதேச குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆர். சரவணன் போட்டியிடுகிறார்” என்றனர்.

திமுக கூட்டணிக்கு...
புதுச்சேரியிலுள்ள மற்ற தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ்-திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீவிரமாக பிரச்சாரம் செய்யப்படும் என்றும் அவர்கள் கூறினர்.பிற்போக்கு சக்தியான பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வருவதை தடுப்பதற்கான தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவது என்று கட்சியின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.முத்தியால்பேட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள சரவணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் சேர்ந்து பணியாற்றினார். பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தன்னை இணைத்துக்கொண்டு படிப்படியாக பிரதேசக் குழு உறுப்பினரானார்.வழக்கறிஞர் தொழிலும் செய்து வரும் சரவணன், எளிய மக்களுக்கான போராட்டங்களில் அர்ப்பணிப்பு உணர்வுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர்.

;