election2021

img

குடிசை வீட்டில் இருந்து கோட்டைக்குப் போகும்  ‘தோழர் மாரிமுத்து...

திருவாரூர்:
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் சிபிஐ சார்பில் போட்டியிட்ட மாரிமுத்துவின் வெற்றியை சமூக வலைதளங்களில் பலரும் கொண்டாடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் திமுக கூட்டணியின் சி.பி.ஐ கட்சி வேட்பாளர் மாரிமுத்து தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுரேஷ் குமாரை விட29 ஆயிரத்து 102 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றி பெற்றார்.

திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற சிபிஐ வேட்பாளர் மாரிமுத்துவின் வீடு பெரிய வசதிகளற்ற கூரை வீடுதான்.முன்னதாக மாரிமுத்து தனது வேட்பு மனுவில், 3 ஆயிரம் ரூபாய் பணம் கையிருப்பு, வங்கிக்கணக்கில் 58 ஆயிரம் ரூபாய் பணம், மனைவியின் கையில் ஆயிரம் ரூபாய் பணம், மனைவியின் 3 பவுன் நகைகளை சொத்து மதிப்பாக குறிப்பிட்டு இருந்தது அனைவர் மத்தியிலும் பெரும் கவனம் பெற்றது. பூர்வீக வீடும் மனைவி பெயரிலான சொத்தாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் இவரின் வெற்றியை பலரும் கொண்டாடி வருகின்றனர்.

;