election2021

img

கீழ்வேளூர் மக்களின் அமோக ஆதரவில் சிபிஎம் வேட்பாளர் நாகைமாலி.....

கீழ்வேளூர்:
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கீழ்வேளூர் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகைமாலி செல்லும் இடமெல் லாம் மக்களின் அமோகஆதரவு பெருகி வருகிறது. கிராமங்களின் எல்லை யிலேயே பொதுமக்கள் கூடி நின்று வரவேற்று வருகின்றனர். 

புதனன்று தொகுதி க்குட்பட்ட பூவைதடி, சின்னதும்பூர், ஆலமழை, பெரியதும்பூர், கீராந்தி, தலையமழை, சோழவித்தியாபுரம், மகிழி, கருங்கனி, மேலப்பிடாகை உள்ளிட்ட கிராமங்களில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து, திமுகஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூராட்சி செயலாளர் மரியசார்லி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;