election2021

img

சிஏஏ-வுக்கு வக்காலத்து வாங்கிய அதிமுக இப்போது பம்முவது ஏன்? சென்னை பிரச்சாரத்தில் கே.பாலகிருஷ்ணன் கேள்வி...

சென்னை:
சிஏஏ, என்.பி.ஆர் சட்டங்களுக்கு பாஜகவுடன் சேர்ந்து கொண்டு வக்காலத்து வாங்கிய  அதிமுக இப்போது பம்முவது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் த.வேலு (மயிலாப்பூர்), மா.சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை), தாயகம்கவி (திரு.வி.க நகர்) ஆகியோருக்கு வாக்கு கேட்டு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரம் செய்தார். இந்தக் கூட்டங்களில் அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு:

அதிமுக-பாஜக அணி கடையாணி கழன்று போன வண்டி போல உள்ளது. 10 வருடமாக அவர்கள் எதையும் செய்யவில்லை. அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்பதாகத்தான் அதிமுகதேர்தல் அறிக்கை உள்ளது. அதிமுக-வின் 11 எம்.பி.,க்கள் ஆதரிக்காவிடில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டமே வந்திருக்காது. அந்த சட்டங்களுக்கு சட்டமன்றத்திலேயே வக்காலத்து வாங்கியது அதிமுக. தற்போது வீசும் எதிர்ப்பலையால், அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தால்அந்த சட்டங்களை எதிர்த்து தீர்மானம் போடுவோம் என்கிறார்கள். நேரத்திற்கு ஏற்ப மாறுவது பச்சோந்தி அரசியல் இல்லையா?37 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள எல்ஐசி நிறுவனத்தை அம்பானிஅதானிக்கு அடிமாட்டு விலைக்கு விற்க உள்ளனர். 2 புடவை வாங்கினால் ஒன்று இலவசம் என்பதுபோல, தமிழகத்தில் உள்ள விமானநிலையங்களை ஏலம் விட போகின்றனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தை தனியாருக்கு கொடுக்க உள்ளதன் முன்னோட்டமாக பிளாட்பார்ம் டிக்கெட்டை 50 ரூபாயாக உயர்த்திஉள்ளனர். மின்சாரத்தை தனியாருக்கு கொடுத்துவிட்டால் 100 யூனிட்இலவச மின்சாரம் கிடைக்காது. இவற்றை செய்யும் மோடிக்கு, அவருக்கு காவடி தூக்கும் எடப்பாடிக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது.

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு, விளைநிலங்களில் எண்ணெய் குழாய் புதைக்க, மின்கோபுரம் அமைக்க அனுமதி, விளை நிலங்கள் வழியாக 8வழிச் சாலை என விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறிசெயல்படும் எடப்பாடி விவசாயியா? இவ்வளவையும் செய்துவிட்டு எடப்பாடி தானொரு பச்சை விவசாயிஎன்று கூறிக் கொள்வது வேடிக்கை யாகவும், விநோதமாகவும் உள்ளது. காவல்துறைக்கு பொறுப்பான முதலமைச்சர், தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்கிறார். இப்படி இருந்தால் நாடு உருப்படுமா?

தமிழகம் எதில் வெற்றி நடைபோடுகிறது? எல்லாவற்றிலும் கொள்ளையடிப்பதில் அதிமுகவுடன் போட்டிபோட யாராலும் முடியாது. கொடூர கொரோனா நோயிலும் கொள்ளையடித்தவர்கள் அதிமுகவினர். எனவே, இருண்டு கிடக்கிறதமிழகத்தை மீட்கப் போராடுகிறோம். பணபலத்தால் மட்டும் வெற்றி பெற முடியாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வென்றதைப்போன்று 234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான அணி வெல்லும்.  ஒன்றிரண்டு இடங்களில் தப்பித்தவறி கூடபாஜக வென்றால், அது அதிமுக-விற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறக் கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.இந்தக் கூட்டங்களில் சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், பா.பால கிருஷ்ணன், பகுதிச் செயலாளர்கள் ஐ.ஆர்.ரவி (மயிலை), ஜி.வெங்கடேசன் (சைதை),  வடசென்னை மாவட்டச்செயலாளர் எல்.சுந்தரராஜன், முன்னாள் கவுன்சிலர் பா.தேவி, விசிக மாவட்ட ச்செயலாளர் ச.அம்பேத் வளவன், திமுக பகுதிச்செயலாளர்கள் எம்.சாமிகண்ணு (தெற்கு), செ.நிலவன்,(காங்கிரஸ்),ராஜி(விசிக), சிபிஎம் பகுதிச்செயலாளர் வி.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;