ஜெயலலிதா அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தவர் பின்னர் கட்சியிலும் ஓங்கப்பட்டவர் தோப்பு என்.வெங்கடாசலம். இருந்தாலும் கடந்த முறை பெருந்துறை தொகுதியில் சீட் கொடுத்தார் ஜெயலலிதா. இரண்டாவது முறை
யாக வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிலமாதங்கள் ஒதுங்கியிருந்தார். பிறகு, இபிஎஸ் அணியில்ஐக்கியமானார். ஆனாலும், அவரை ஓரங்கட்டிவிட்டனர். இதனால் கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்தார். தற்போது சொந்த கட்சி வேட்பாளரை வீழ்த்தியே தீரவேண்டும் என்று சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்து தேர்தல் களம் காண்கிறார் தோப்பு வெங்கடாசலம்.
அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கிறார் எம்.எல்.ஏ.சந்திரசேகரன். அதனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்துஇந்த இருவரையும் கட்சித் தலைமை நீக்கியிருக்கிறது.