மோடி அரசாங்கத்திடம் சரணாகதி அடைந்து தமிழக உரிமைகளை இ.பி.எஸ்- ஓ.பி.எஸ். கூட்டணி அடகு வைத்துவிட்டது எனும் உண்மையை தமிழக மக்கள் அனைவரும் அறிந்து வைத்துள்ளனர். தமிழகத்தின் நலனுக்காகவே நாங்கள் மத்திய அரசாங்கத்திடம் இணக்கமாக இருக்கிறோம் என இரட்டைத்தலைமை ஓயாமல் கூறுகிறது.
அப்படி இணக்கமாக இருந்ததால் தமிழகம் என்ன நன்மைகளை பெற்றது? இதோ பல்வேறு புயல் மற்றும் வறட்சி பிரச்சனைகளுக்கு தமிழக அரசாங்கம் கோரியதும் மோடி அரசாங்கம் கொடுத்ததும்!
தமிழக அரசாங்கம் மோடி அரசாங்கம்
கோரியது/ரூ கோடி கோரியது/ரூ கோடி
2011-12 தானே புயல் 5,249 500
2012-13 வறட்சி 19,988 656
2015-16 வெள்ளம் 25,912 1,738
2016-17 வறட்சி 39,565 1,748
2016-17 வர்தா புயல் 22,573 226
2017-18 ஒக்கி புயல் 9,330 133
2018-19 கஜா புயல் 17,899 1,146
2020-21 நிவர் புயல் 3,758 63
2020-21 புரெவி புயல் 1,200 224
மொத்தம் 1,45,474 6,434
சதவீதம் 100% 4.42%
தமிழக அரசாங்கம் கேட்டதில் வெறும் 4.42% மட்டுமே மோடி அரசாங்கம் கொடுத்தது. இதுதான் இணக்கத்தின் பலனா?
மேலும்
* ஜி.எஸ்.டி. இழப்பீடு முழுமையாக தரப்படவில்லை; அதற்கு மாறாக ரூ.6,229 கோடி கடனாகவே தரப்பட்டுள்ளது.
* உள்ளாட்சி துறை மூலம் தர வேண்டிய நிலுவை தொகை ரூ.2600 கோடி தரப்படவில்லை.
* 15வது நிதிக்குழு பரிந்துரைத்ததில் இன்னும் ரூ.2500 கோடி தரப்படவில்லை.
இவ்வளவு நிலுவை தொகைகளை பெறுவதில் அதிமுக அரசின் இணக்கம் உதவவில்லையே!ஏன்?
ஏனெனில் இவர்கள் வலுவாக இவற்றை கேட்கமாட்டார்கள். அதற்கு மாறாக வேறு சில நன்மைகள் “இணக்கத்துக்கு” பரிசாக கிடைத்துள்ளன என்பதை மக்கள் அறிவார்கள். இவர்களின் இணக்கம் தமிழக மக்களுக்காக அல்ல! தமது சொந்த நலனுக்காக!
தமிழக மக்களின் நலன்களை மோடி அரசிடம் அடகுவைத்தஅதிமுக ஆட்சியை தூக்கி எறிவோம்!
ஆட்சி மாற்றம் நிகழ்த்துவோம்!
மாநில உரிமைகள் மீட்போம்!
தொகுப்பாளர் : அ.அன்வர் உசேன்
கார்ட்டூன் உதவி : நன்றி சித்ரன் (உங்கள் நியூஸ்)