election2021

img

சிபிஎம் வேட்பாளர் நாகைமாலிக்கு வாக்குக் கேட்டு வாலிபர் சங்கம் இருசக்கர வாகனத்தில் பிரச்சாரம்....

கீழ்வேளூர்: 
மாவீரன் பகத்சிங் நினைவு தினத்தையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கீழ்வேளூர் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் நாகைமாலிக்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் வாக்குச் சேகரித்து இரு சக்கர வாகன பிரச்சாரம் செவ்வாயன்று நடைபெற்றது. 

சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.சிவக்குமார் தலைமை வகித்தார். நூற்றுக்கணக்கான இருச்சக்கர வாகனங்களுடன் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்ற பிரச்சாரத்தை, பாப்பாக்கோவிலில்  வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வடிவேல் துவக்கி வைத்தார். இந்த வாகனப் பிரச்சாரம் தொகுதிக்குஉட்பட்ட செம்பியன்மாதவி, ஆலங்குடி,ஒரத்தூர், இருக்கை, வடக்கு பனையூர், சாட்டியக்குடி, அனக்குடி, வெண்மணி வழியாக வாக்காளர்களை சந்தித்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ், வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகிகள் உரையாற்றினர். இறுதியாக மாலைதேவூர் கடைவீதியில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கே.பி. ஜோதிபாசு  உரையாற்றினார்.

;