election2021

img

திமுக-- கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் ஆதரவு....

திருச்சிராப்பள்ளி
ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்தின் தலைமை நிர்வாகிகள் குழு கூட்டம்திருச்சியில் ஞாயிறன்று நடந்தது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர்அல்தாஃபி தலைமை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வந்தவேளாண் சட்டத்திருத்தம், குடியுரிமை சட்ட திருத்தம், ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, நீட் தேர்வு பெட்ரோல்,டீசல், கேஸ் விலை உயர்வு போன்றமக்கள் விரோத சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து அடிமை சேவகம் செய்து வரும் அதிமுக அரசை கண்டிக்கிறோம். மக்கள் மத்தியில் மத ரீதியாக பிளவுபடுத்தி இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் பிஜேபிகட்சியுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக அரசு வீழ்த்தப்பட வேண்டும்.ஜனநாயகத்தை, இந்திய இறையாண்மையையும் பாதுகாக்க போராடி வரும் விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்த திமுக கூட்டணிக்கு ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் முழுஆதரவு அளிக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என  சட்டம்இயற்ற வேண்டும். இதன் மூலம் இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழும். திமுக தேர்தல் அறிக்கையில்மதுவிலக்கு குறித்து எந்த ஒருஅறிவிப்பும் இல்லை. எனவே திமுக ஆட்சிக்கு வந்தபின் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த  வேண்டும் என்ற கோரிக்கையை திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு வைக்கிறோம் என்றார்.

;