election2021

img

சிபிஎம் வேட்பாளர் நாகைமாலிக்கு வாக்குக் கேட்டு கனிமொழி எம்.பி பிரச்சாரம்....

கீழ்வேளூர்:
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கீழ்வேளூர்சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகைமாலியை ஆதரித்து திமுக நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொகுதிக்குட்பட்ட தேவூர், மேலப்பிடாகை பகுதிகளில் அரிவாள், சுத்தியல், நட்சத்திர சின்னத்திற்கு வாக்குச் சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட கூட்டத்திற்கு மத்தியில் உரையாற்றிய அவர் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி பேசினார். அங்காடிகளில் தரமற்ற புழு புழுத்த அரிசி, பருப்பு வழங்கும் நிலையில் அதிமுக அரசு, பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விரோதசட்டங்களுக்கு ஆதரவாகவும், அடிமையான அரசாகவும் இருக்கிறது. அந்த கொடிய சட்டங்களால் நாம் என்ன சாப்பிட வேண்டும், எதை நிலங்களில் பயிரிட வேண்டும், எதை அறுவடை செய்ய வேண்டும் என்று கார்ப்பரேட் கம்பெனிகள் முடிவு செய்யும் மிக ஆபத்தான சட்டங்களை ஆதரிக்கிறது. 

அச்சட்டம் வந்துவிட்டால், மோசமான அரிசிகூட மக்களுக்கு கிடைக்காது என கடுமையாக விமர்சனம்செய்த அவர் மக்களை பாதுகாக்க திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம்வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்நாகை மாலிக்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.

;