election2021

img

சாபம் விட்டார்   சுப்பிரமணியசாமி...  

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக 20 இடங்களில் போட்டியிடுகிறது. இதற்கான ஒப்பந்தம் இரவோடு இரவாக கையெழுத்தான நிலையில், தொகுதிகள் ஒதுக்கீடும் முடிவடைந்துள்ளன. 
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி எம்.பி.,திருப்பதியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்றார். தேசிய கட்சியான பாஜக, மாநிலத்தில் தனித்துப் போட்டியிட்டிருக்க வேண்டும்.  வெற்றியோ, தோல்வியோ தனித்து களம் காண வேண்டும்.  கூட்டணி அமைத்து போட்டியிடுவது சரியல்ல என்றும் கூறினார்.இவரது பேட்டி தமிழக பாஜகவுக்குள் புகைச்சலையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

;