election2021

img

சிபிஎம் வேட்பாளர் நாகைமாலிக்கு ஆதரவாக மாணவர் சங்கம் பிரச்சாரம்....

கீழ்வேளூர்:
மாணவ தியாகிகள் சோமு, செம்புவின் 40 ஆம் ஆண்டு நினைவு தினத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாகை மாலிக்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் வாக்குகள் கேட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் கீழ்வேளூரில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை தொடங்கினர்.

பிரச்சாரத்திற்கு திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஹரிசுர்ஜித் தலைமை வகித்தார். மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் அமுல் காஸ்ட்ரோ வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் பிரச்சாரப் பயணத்தை துவங்கி வைத்து உரையாற்றினார். பிரச்சாரப் பயணத்தை வாழ்த்தி திமுக பேரூராட்சி கழகச் செயலாளர் அட்சயலிங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் பாரதிஅண்ணா, மாணவர் சங்கத்தின் மாநிலதுணைச் செயலாளர் ஆறு.பிரகாஷ்ஆகியோர் பேசினர். நிறைவாக நாகை மாவட்டச் செயலாளர் ஸ்ரீதரன் நன்றி கூறினார்.

;