election2021

img

பாவம் பாஜக சீனிவாசன்...

மதுரை:
பாஜக-வில் காலையில் சேர்ந்த மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணனுக்கு “இன்ஸ்டன்ட் காபி” போல மதுரை வடக்குத் தொகுதியை கொடுத்து அவரை குதூகலப்படுத்தினர். அதே நேரத்தில் இந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட பாஜக மாநிலச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் ஏன் மனம் மாறினார் எனத் தெரியவில்லை.  பாஜக கூறியதால் விட்டுக்கொடுத்ததாக சீனிவாசன் கூறக்கூடும். என்னவிருந்தாலும் அவரது நிலை தான் பரிதாபத்திற்குரியது. சரவணனுக்கு சீட் கொடுத்த பாஜக தலைமையைக் கண்டித்து அக்கட்சியினர் மதுரை புதூரில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜகவினர்  பின்னர் சீனிவாசன் திறந்துவைத்த தேர்தல் அலுவலகத்தை பூட்டிவிட்டு புலம்பிச் சென்றனர்.

;