election2021

img

அதிமுக வேட்பாளருக்கு அதிர்ச்சி வைத்தியம்....

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வாக்குக் கேட்க வந்த அதிமுக வேட்பாளருக்கு நியாயவிலைக் கடையில் வழங்கப்பட்ட தரமில்லாத அரிசியைக் கொண்டு ஆரத்தி எடுக்கக் காத்திருந்த பெண்களால் அதிமுகவினர் பதற்றமடைந்தனர். 

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளரும், இந்தத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராகவும்  பதவி வகித்து வரும் மாணிக்கம், அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் திங்களன்று காலை தன்னுடைய வாக்குச் சேகரிப்பை துவக்கினார். ஆரம்பகட்ட வரவேற்பே அதிமுக தோல்வியை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. அலங்காநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட தண்டலை செவக்காடு பகுதியில் வாக்குச் சேகரித்தார். அப்போது அதிமுகவினர் யாரும்எதிர்பாராத நிலையில் நியாயவிலைக் கடையில் வழங்கப்பட்ட அரிசியை தட்டில் வைத்து ஆரத்தி எடுக்கக் காத்திருந்தனர்.  இதனால் பதற்றமான அதிமுகவினர், ஆரத்திஎடுப்பதைத் தடுக்க முயற்சித்தனர். இதனால் அதிமுகவினருக்கும் பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ரேஷன் பொருட்களை வீடுகளில் வழங்குவதாகக் கூறும் தமிழக முதல்வருக்கும் 234 தொகுதிகளில் போட்டியிடும் அவரது கட்சியினருக்கும் அவர்களது பங்காளியான பாஜக-விற்கும் எத்தகைய பாடத்தை கற்பிக்கத் தயாராகிவிட்டனர் என்பதை சோழவந்தான் தொகுதி வாக்காளர்கள் நிரூபித்துள்ளார்கள்.

;