election2021

img

பாஜகவால் அனுப்பப்பட்ட மாய மான்களால் எதுவும் நடக்காது....

திமுக தலைமையிலான கூட்டணி, கொள்கைக் கூட்டணி. இதை எதிர்க்கவும், திமுக வாக்குகளை பிரித்து வெற்றியைத் தடுக்கவும் மாய மான்களைப் போல சிலரை பாஜக கூட்டணியினர் அனுப்பியுள்ளனர். அந்த மாய மான்களால் எதுவும் நடக்கப் போவதில்லை. அதிமுகவினர் நமக்கு எதிரிகள் அல்ல. அரசியல் காரணங்களால் தற்போது விலகி நிற்கின்றனர்.இத்தேர்தலில் திமுக கூட்டணியினர் மீட்கப்போவது தமிழகத்தை மட்டுமல்ல, அதிமுக எனும் கட்சியையும் சேர்த்துத்தான்.
தமிழகம் ஆபத்தான சூழலில் இருக்கிறது. புதிய கல்விக் கொள்கையின் மூலம் குலக்கல்வி முறையை மீண்டும் திணிக்க முயற்சிக்கின்றனர். இங்குள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு பதிலாக வட மாநிலத்தவர்கள் பணியில் நியமிக்கப்படுகின்றனர். ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை தொடர்பான குற்ற விசாரணையில், இலங்கை அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு பேசி வருகிறது. எனவே, தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட காவி வெற்றி பெறக்கூடாது. இது பெரியார் மண். பாறை. இதில் ஒருபோதும் தாமரை மலராது. தற்போது அடிக்கும் அடியில், அவர்கள் இனிமேல் இந்த பக்கமே வரக்கூடாது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து காட்டூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  பேசியதில் இருந்து...

;