election2021

img

திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளருடன் செல்பி....

திண்டுக்கல்:
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  வேட்பாளர் என்.பாண்டியுடன்,  அவரது புகைப்படம் பொருந்திய முகமூடி அணிந்து வாக்குச் சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்,மாணவர்கள், வேட்பாளருடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர். 

செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் வாக்கு சேகரித்த போது பி.எம்.ஜே. திருமண மண்டப வளாகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் வேட்பாளர் என்.பாண்டியுடன் செல்பி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள், மாணவர்கள் என்.பாண்டியின் உருவப்படம் பொறித்த முகமூடியை அணிந்து தனித்தனியாக செல்பி எடுத்துக்கொண்டனர். பிறகு அனைவரும் மொத்தமாக எடுத்துக்கொண்டனர். பின்னர் அனைவரும் செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தனர். இளைஞர்கள், மாணவர்களின் இந்த நூதனமான நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய மாணவர் சங்க மாநிலச்செயலாளர்  வி.மாரியப்பன், மாவட்டச்செயலாளர் முகேஷ், வாலிபர் சங்க மாநில துணைச்செயலாளர் சி.பாலச்சந்திரபோஸ், மாவட்டச்செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மாவட்டத்தலைவர் விஷ்ணுவர்த்தன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். (நநி)

;