election2021

img

சீமானே அதிபர்... பொய் சொல்லிக் கொண்டிருந்தால் யார் நம்புவார்கள்?

அவருக்கென்று தொடர்ச்சியாக எந்தக் கொள்கையும் கடைபிடித்த தில்லை.எந்தத் தத்துவமும் கிடையாது. தெரியாது. மார்க்சியமோ, தமிழ்த் தேசியம் பற்றியோ சிறிதளவும் ஞானம் கிடையாது. ஆனால் அவர் இடதுசாரிகளைப் பார்த்து உங்களிடம் தத்துவம் இருக்கிறதா என்று கேட்பது சிறந்த நகைச்சுவை.

இன்றைய சமூக  யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளத் துளி கூட அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. அதாவது சமூக ஊடகங்களை எல்லோரும் படிக்கிறார்கள். அதனால் அவ்வப்போது உலகிலுள்ள அனைத்துத் தகவல்கள் குவிந்து கொண்டே இருக்கின்றன. இந்த அடிப்படை  உண்மை கூடத் தெரியாமல் கேப் விடாமல் பொய் சொல்லிக் கொண்டிருந்தால் யார் நம்புவார்கள்? இதனால் படித்த இளைஞர்களிடம் அவர் சிறந்த காமெடி பீசாகவே கருதப்படுகிறார்அவரது அணுகுமுறையை எதிர்ப்பவர்கள் அனைவரும் திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்களாம்.  திராவிடக் கட்சிகளை ஒழித்துவிட்டு அந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம் என்ற பாஜகவின்  அரசியலே இது.நாம் தமிழர் கட்சி எந்த ஐனநாயகத் தன்மையும் அற்றது. சீமானே அதிபர். அனைத்தையும் அவரே தீர்மானிப்பார்.. அறிவாளிகள் அல்ல, சாதாரணமாக அரசியல் தெரிந்தவர்களே அங்கு இருக்க முடியாது. 

- சேது

;