election2021

img

சாக்கு மூட்டை... சாக்கு மூட்டை....

திருச்சியில் நடந்தசம்பவம் ஒன்றுதமிழக தேர்தல்களத்தில் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களேஉள்ளன. ஆளுங்கட்சி பண மூட்டைகளுடன் சுற்றித்திரிந்து கொண்டுவருவது அம்பலத்திற்கு வந்துள்ளது.பறக்கும்படை தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்ட போது திருச்சி - கரூர் சாலை பெட்டவாய்த்தலை பாலத்தில் ஜீப் ஒன்று நின்று கொண்டிருந்தது கண்ணில் பட்டுள்ளது.அங்கு சென்றுபோது ஒரு சாக்கு மூட்டையை கண்டெடுத்தனர்.இந்த சாக்கு மூட்டையை திறந்து பார்த்ததில் அதில் 1 கோடி ரூபாய் பணம் இருந்துள்ளது.  விசாரணையில் ஜீப்பில் இருந்தவர்கள் முசிறி தொகுதி அதிமுக எம்எல்ஏவும் தற்போதைய வேட்பாளருமான செல்வராஜ் நண்பர்கள் என்பதும் தெரியவந்தது. அதிமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரனும் இந்த காரில் இருந்துள்ளார்.

பதற்றத்துடன் காணப்பட்ட அவர்கள், அந்த 1 கோடி ரூபாய் எங்களு டையது இல்லை. இந்த பாலத்தில் இரண்டு காரில் வந்த நபர்கள் சண்டை போட்டுக் கொண்டு இருந்தனர். அவர்கள்தான் இந்த மூட்டையை தூக்கி எறிந்துவிட்டு சென்றதாக கதை விட்டுள்ளனர். பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதிமுக வினரை கைது செய்தனர்.இந்த தேர்தலிலும் ஆளும் அதிமுக தரப்பிலிருந்து பணம் அதிகம் விளையாடுகிறது. அதற்கு இந்த சாக்கு மூட்டைதான் உதாரணம்.இந்த மூட்டை யாருடையது என்பது எங்களுக்கு தெரியும்.. அதை மிக விரைவில் அம்பலப்படுத்துவோம் என்றுமதச்சார்பற்ற கூட்டணி கட்சி தலைவர்கள் தெரிவித்திருப்பது ஆளும் அதிமுக தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

;