மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திண்டுக்கல் தொகுதி சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டியை ஆதரித்து வியாழனன்று பல்வேறு மையங்களில் திரைக்கலைஞர் ரோகிணி பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக ரோகிணி பங்கேற்ற பிரச்சாரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பெண்கள் ஏராளமானோர் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னம் பொறித்த குடைகளுடன் அணிவகுப்பு நடத்தினர்.