இ.பி.எஸ்- ஓ.பி.எஸ். இரட்டை தலைமை தமிழகத்தின் நிதி நிலையை சீரழித்துவிட்டது. இதனை கீழ்கண்ட விவரங்கள் தெளிவாக்குகின்றன:
ஆட்சி ஆண்டு கடன்தொகை/கோடி ரூ.
தி.மு.க. 2011 1,01,439
ஜெயலலிதா ஆட்சி 2016 2,47,031
இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமை ஆட்சி 2021 4,98,000
# 2021-22 நிதியாண்டில் இந்த கடன் 5,70,000 கோடியாக அதிகரிக்கும் என இரட்டைத்தலைமையின் பட்ஜெட் அறிக்கை குறிப்பிடுகிறது. அதாவது தமிழகத்தில் உள்ள புதியதாக பிறக்கும் குழந்தை உட்பட, ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.60,000 கடன் சுமத்தப்பட்டுள்ளது.
# ஒரு மாநில அரசாங்கம் கடன் வாங்குவது தவறல்ல; ஆனால் கடன் எதற்காக என்பதுதான் கேள்வி! தொழில் வளர்ச்சிக்கோ அல்லது விவசாய வளர்ச்சிக்கோ அல்லது கோவிட்19 போன்ற காலங்களில் மக்களுக்கு உதவிடவோ இந்த கடன் பயன்படுத்தப்படவில்லை.
வருவாய் பற்றாக்குறையும் இரட்டைத் தலைமை ஆட்சியில் செங்குத்தாக உயர்ந்துள்ளது:
ஆட்சி ஆண்டு வருவாய்/ரூ.கோடி
தி.மு.க. 2011 +2,386 கோடி
ஜெயலலிதா ஆட்சி 2016 -17,057 கோடி
இபிஎஸ் - ஓபிஎஸ் ஆட்சி 2021 -1,31,000 கோடி
# கடந்த 8 ஆண்டுகளில் தமிழக அரசாங்கம் தான் வாங்கிய கடனுக்கு வட்டியாக மட்டும் ரூ.1,89, 872 கோடி கட்டியுள்ளது.
# வட்டிக்காக கொடுத்த இந்த பணத்தில்
# தரமான 500 மருத்துவ கல்லூரிகளை கட்டலாம்.
# தரமான 1200 பொறியியல் கல்லூரிகளை கட்டலாம்.
# தரமான 6000 உயர்நிலை பள்ளிகளை உருவாக்கலாம்.
# 50க்கும் அதிகமான BHEL/NLC போன்ற ஆலைகளை உருவாக்கி ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வழங்கலாம்!
# 10 லட்சம் வீடுகளை கட்டி ஏழைகளுக்கு தரலாம்!
வருவாயின் கணிசமான பகுதியை வட்டிக்கு மட்டுமே தரவேண்டிய அவலத்தை இ.பி.எஸ்- ஓ.பி.எஸ். ஆட்சி உருவாக்கியுள்ளது.
# கடன் சுமை/வருவாய் பற்றாக்குறை/ வட்டி சுமை என தமிழகத்தின் நிதிநிலைமை படுகுழியில் வீழ்ந்துள்ளது.
# தமிழகத்தின் நிதி நிலைமையை சிதைத்த இபிஎஸ் - ஓபிஎஸ் ஆட்சியை வீழ்த்துவோம்!
# ஆட்சி மாற்றத்தை உருவாக்குவோம்!
# தமிழகத்தின் நிதி மேன்மையை நிலை நாட்டுவோம்!
அ. அன்வர் உசேன்