பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தார் என்று கட்சித் தலைமைக்கு பரபரப்பு புகார் கொடுத்தவர் சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ., ராஜவர்மன். அதிமுக அறிவித்த வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம் இடம்பெறவில்லை. ஓரங்கட்டப்பட்ட ராஜவர்மன் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து அமமுகவில் இணைந்துவிட்டார். `இதேபோல் கள்ளக்குறிச்சி பிரபு, விருதாச்சலம் கலைச்செல்வன், ரத்ன சபாபதிக்கும் இந்த முறை சீட் வழங்கப்படவில்லை. இவர்கள் மூவரும் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட்டவர்கள். பிறகு, அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்து, அதிமுகவுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் செயல்பட்டு வந்தனர். இருந்தாலும் இந்த மூவருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் மீண்டும் தினகரனை சந்தித்தனர்.