election2021

img

“அரசியலே வேண்டாம்”: ஒதுங்கும் அதிமுக பெண் எம்எல்ஏ....

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் கோடை வெயிலைக் காட்டிலும் சூடிபிடிக்க துவங்கிவிட்ட நிலையில், பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ தான் அரசியலில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கு மிக குறைந்த நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு மனுதாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பல பரபரப்பான விஷயங்கள் அரங்கேறி வருகின்றன.கட்சி தாவல், சீட் தரவில்லை என்று போராட்டம், தீக்குளிப்பு முயற்சி உள்ளிட்ட செயல்கள் தற்போதுள்ள அரசியல் களத்தில் சாதாரணமானதாக மாறிவிட்டது. அந்த வகையில் பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் தனக்கு மீண்டும் சீட் அளிக்கப்படும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தார். ஆனால் இந்த முறை பண்ருட்டி தொகுதி முன்னாள் எம்எல்ஏவும் மாவட்டச் செயலாளருமான சொரத்தூர் ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது. 

இதனால் தற்போதைய எம்எல்ஏ சத்யாவும் அவரது ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியடைந்தனர். இந்த நிலையில் குடும்பச்சூழல் காரணமாக அரசியலில் இருந்து விலகுவதாக அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். முன்னாள் நகர மன்றத் தலைவரான அவரது கணவரும் அரசியலில் இருந்து அரசியல் மற்றும் பொதுவாழ்விலிருந்தும் விலகியுள்ளார்.

;