election2021

img

எளிய மக்களின் வாழ்த்து மழையில் நாகைமாலி...

நாகப்பட்டினம்:
கீழ்வேளுர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தோழர் நாகைமாலி க்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாகைமாலி அவர்களுக்கு எளிய மக்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.கூட்டணி கட்சி தலைவர்களும் தொண்டர்களும் சால்வை அணிவித்து வாழ்த்தை பரிமாறிக்கொள்கின்றனர். கிராம பகுதிகளில் வயல் வெளிகளில் உழைக்கின்ற மக்கள் தங்கள்தோழருக்கான வாழ்த்தையும் அன்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். சில இடங்களில் மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்று வெற்றியை கொண்டாடி வருகின்றனர். உழைக்கும் மக்கள், அரசு ஊழியர்கள், நடுத்தர மக்கள், வியாபாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சாலையோர சிறு வியாபாரிகள், என அனைத்து தரப்பு மக்களின் அன்பையும் பாராட்டையும் பெற்று வருகிறார்.

வெற்றி பெற்றவுடண் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து நன்றி கூறினார்.மக்களோடு மக்களாக எந்நேரமும் களத்தில் நின்று போராடி மக்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி அவர்கள்வாழ்த்து மழையில் நனைந்த வண்ணம்உள்ளார்.இன்று கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து நன்றி கூறினார். அப்போதுதிமுக ஒன்றிய செயலாரும் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளருமான ப.கோவிந்தராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் நாகைமாலி க்கு மலர் மாலை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் வீ.மாரிமுத்து. வி ச மாநில தலைவர் வி.சுப்ரமணியன். ஒன்றிய செயலாளர் எம். என்.அபுபக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;