election2021

img

வாக்காளருக்கு கொடுக்கச் சென்ற பணம் சிக்கியது.... அதிமுக வேட்பாளர் உட்பட 5 பேர் மீது வழக்கு.....

தேனி:
ஆண்டிபட்டி அருகே கொத்தப்பட்டி கிராமம்அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தேர்தல் பார்வையாளர் அந்த பகுதியில் இருந்த வாகனங்களை சோதனை செய்தார். இதில் உரிய ஆவணம் இன்றி 28 ஆயிரம் பணம்இருந்தது தெரியவந்தது. இந்த பணம் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் முன்னும் பின்னுமாக பதில் அளித்தனர். பின்னர் இந்தப்பணம் வாக்காளருக்கு கொடுக்க வந்த பணம் என்பது தெரியவந்தது. அந்த பணத்தை  பறிமுதல் செய்தனர். அதேபோல் அவர்கள் வந்த மற்றொரு கார், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அனுமதி பெறாமல் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது தெரியவந்தது. அந்த காரையும் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ராஜதானி காவல்துறையினர் அதிமுக வேட்பாளர் லோகிராஜன் மற்றும் அவருடைய உடன்பிறந்த சகோதரர் குபேந்திரன், அதிமுக நிர்வாகி பிரபு, ஓட்டுநர்கள் பாலமுருகன், பாண்டிஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;