election2021

img

மே 2 திட்டமிட்டபடி வாக்கு  எண்ணிக்கை.... தலைமை தேர்தல் அதிகாரி தகவல்.....

சென்னை:
மே 2 ஆம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.  ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை மே 2 ஞாயிறன்று நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். எனவே அன்றைய தினம் திட்டமிட்டபடி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்று அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்தது.இந்நிலையில் கொரோனா விதிகளை பின்பற்றி திட்டமிட்டபடி மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள் ளார்.  மேலும் தமிழக தலைமைச்செயலாளர், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் காணொலிக்காட்சி மூலம் தலைமை தேர்தல் அதிகாரிசத்யபிரதா சாகு புதனன்று  ஆலோசனை நடத்தினார்.

;