election2021

img

அசாமில் மகாஜோட் கூட்டணி ஆட்சியை கைப்பற்றும்... பாஜக கூட்டணி தோற்கப் போவது உறுதி...

திஸ்பூர்:
அசாமில் பாஜக - அசாம் கணபரிஷத் கூட்டணியை, காங்கிரஸ்- இடதுசாரிகளை உள்ளடக்கிய மகா கூட்டணி (Mahajot) தோற்கடிக்கும் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் நம் பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், பூபேஷ் பாகேல் மேலும் கூறியிருப்பதாவது:

குடியுரிமைத் திருத்தச் சட்டநிலைப்பாட்டைப் பொறுத்தவரை, அசாம், மேற்குவங்கம், தமிழ்நாடு ஆகிய ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு நிலைப்பாட்டை பாஜக எடுத்துள்ளது. பாஜக அரசின் இந்த வெவ்வேறு நிலைப்பாடுகள், மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற் படுத்தி உள்ளது.குடியுரிமைத் திருத்தச் சட்டபிரச்சனையில், அசாம் முழுவதும் பாஜகவுக்கு வலுவான எதிர்ப்பு உணர்வு உள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராகத்தான் மாநிலம் முழுவதும் ஓராண்டாக போராட்டம் நடைபெற்றது. ஏனெனில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது அசாம் தான். தங்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்திற்கு குடியுரிமைச் சட்டம் ஆபத்து என்பதை மக்கள் அறிவார்கள்.

இதுதவிர, அசாம் மக்களுக்கு ஏற்கெனவே கொடுத்தவாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை. இந்த வகையிலும் தாங்கள் ஏமாற்றப்பட்டு இருப் பதை மக்கள் உணர்ந்துள்ளனர். அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லாததால் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். தேர்தல் மூலம் பாஜகவைத் தண்டிக்க முடிவு செய்து விட்டனர். அசாம் சட்டமன்றத் தேர்தலில், பாஜக-வுக்கு எதிரான காங்கிரஸ் தலைமையிலான மகாகூட்டணி 100-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் எனகருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், எண்களைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. பெரும்பான்மை இடங்களை நாங்கள் வெல்வோம் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.

முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 47 தொகுதிகளில் 43 இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. நான்கு இடங்களில், மகாஜோட்கூட்டணி கட்சியினர் போட்டியிடுகின்றனர். நடைபெற உள்ள மூன்று கட்டத் தேர்தல்களின் முடிவில், மகாஜோட் கூட்டணி நான்கில் மூன்றுபங்கு பெரும்பான் மையுடன் அரசாங்கத்தை அமைக்கும்.இவ்வாறு பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார்.அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுவது குறிப் பிடத்தக்கது.

;