election2021

img

அவதூறுகளை உடைத்து வெல்வோம்...

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக ஆதித் தமிழர் பேரவை நிறுவனரும் தலைவருமான அதியமான் போட்டியிடுகிறார். கூட்டணிக் கட்சியினரிடையே வேட்பாளரை அறிமுகம் செய்து தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் விதமாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட செயல்வீரர்கள் கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா பேசியதில் இருந்து...

“தமிழக அரசியல் மாற்றத்தை நோக்கி இந்தத் தேர்தல் சென்றுகொண்டி ருக்கிறது. அவிநாசியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டி யிடும் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்பி சாதிவெறியைத் தூண்டி வெற்றியைப் பறித்துவிடலாம் என எண்ணுகிறார்கள். உண்மையாகவே சொல்கிறேன், அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதி நல்ல ஒரு சட்டப்பேரவை உறுப்பினரைப் பெறப்போகிறது.திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்தத் தொகுதியில் என்னென்ன தேவைகள் இருக்கிறதோ அத்தனை தேவைகளையும் அவிநாசி தொகுதியில் வெற்றி பெறஇருக்கின்ற திமுக கூட்டணி வேட்பாளர் அதியமானும், மக்களவை உறுப்பினரான நானும் ஒன்றிணைந்து நிச்சயமாக நிறைவேற்றுவோம்.

;